ETV Bharat / state

Jasmine flower price: மல்லிகைப் பூ விலை கிடுகிடு உயர்வு: கிலோ எவ்வளவு தெரியுமா?

Jasmine flower prices: கடும் பனிப்பொழிவு மற்றும் தொடர் மழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.2257-லிருந்து ரூ.4100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author img

By

Published : Jan 13, 2023, 3:18 PM IST

Updated : Jan 13, 2023, 3:42 PM IST

Jasmine flower price
மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு
Jasmine flower price: மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.4100-க்கு விற்பனை!

Jasmine flower price: ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 25ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டு மல்லி உள்ளிட்டப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து, சத்தியமங்கலம் மலர் சாகுபடி சந்தையில், ஏல முறையில் விற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பூக்கள் உற்பத்தி தினந்தோறும் 2 டன் ஆக இருந்த நிலையில், தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி அரை டன்னாக சரிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மல்லிகை விற்பனை அதிகரித்துள்ளதால், பூக்களை ஏலம் எடுப்பதில் விவசாயிகளிடையே கடும் போட்டி நிலவியது.

பூக்களின் உற்பத்தியை விட அதன் தேவை அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.2257-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.4100 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கிலோ 2000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இங்கு கொள்முதல் செய்யும் பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் நேற்று கிலோ ரூ.1760-க்கு விற்கப்பட்ட முல்லை ரூ.2450 -க்கும், செண்டுமல்லி ரூ.90-ல் இருந்து 120 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் போக்கு காட்டும் கருப்பன் யானை.. வனத்துறையினர் திணறல்!

Jasmine flower price: மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.4100-க்கு விற்பனை!

Jasmine flower price: ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 25ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, செண்டு மல்லி உள்ளிட்டப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் பூக்களை தினந்தோறும் பறித்து, சத்தியமங்கலம் மலர் சாகுபடி சந்தையில், ஏல முறையில் விற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பூக்கள் உற்பத்தி தினந்தோறும் 2 டன் ஆக இருந்த நிலையில், தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி அரை டன்னாக சரிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மல்லிகை விற்பனை அதிகரித்துள்ளதால், பூக்களை ஏலம் எடுப்பதில் விவசாயிகளிடையே கடும் போட்டி நிலவியது.

பூக்களின் உற்பத்தியை விட அதன் தேவை அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.2257-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ரூ.4100 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கிலோ 2000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இங்கு கொள்முதல் செய்யும் பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் நேற்று கிலோ ரூ.1760-க்கு விற்கப்பட்ட முல்லை ரூ.2450 -க்கும், செண்டுமல்லி ரூ.90-ல் இருந்து 120 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் போக்கு காட்டும் கருப்பன் யானை.. வனத்துறையினர் திணறல்!

Last Updated : Jan 13, 2023, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.