தேசிய புலிகள் காப்பகத்தின் விதிமுறைகளின் படி அழிந்து வரும் புலிகளைக் காப்பாற்றவும், வனத்தின் நீர்நிலைகள், விலங்குகளின் நடமாட்டங்களை துல்லியாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க பகல், இரவு நேரத்தில் படம்பிடித்து அலுவலகத்திற்கே படம் அனுப்பும் அதிவீன ட்ரோன் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக இந்தியாவில் 13 இடங்களில் ட்ரோன் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் எட்டு இடங்களிலும் தென்னிந்தியாவில் ஐந்து இடங்களிலும் ட்ரோன் பயிற்சி அளிப்பதற்கு இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் முன்வந்துள்ளது.
இந்திய வனச்சூழல், வன உயிரி ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து தென்னிந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆளில்லா விமானம் இயக்குதல் பயிற்சி அளிக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் வனத்துறையினர் மேற்கொள்ளும் பணி சவாலாக இருப்பதால் மனித விலங்குகள் மோதல் ஏற்படுவதைத் தவிர்பதற்காக தான் 24 மணிநேரமும் காடுகளைக் கண்காணிக்கும் ட்ரோன் தொழில்நுட்பத்தை வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.