ETV Bharat / state

தப்பியோட முயன்ற தலைமையாசிரியர் காவல்துறையிடம் ஒப்படைப்பு - Headmaster school documents inappropriately

ஈரோடு:அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, ஆவணங்களை ஒப்படைக்காமல் தப்பியோட முயன்ற அப்பள்ளியின் தலைமையாசிரியரை அலுவலர்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

headmaster
headmaster
author img

By

Published : Jan 11, 2020, 6:31 PM IST

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரன் ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு, பராமரிப்புகுழு நிதி கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி ஆணவங்களை பள்ளியில் ஒப்படைக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கல்வித்துறை அலுவலர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் ஆவணங்கள் ஏதும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைத்துள்ளார். இது குறித்து தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது ஆவணங்களைத் தனது வீட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து கல்வி அலுவலர்கள் ஆவணங்களை வாங்க தலைமையாசிரியரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது ஆவணங்கள் வீட்டில் இல்லை பேக்கரி ஒன்றில் உள்ளதாக கூறியுள்ளார்.

தப்பியோட முயன்ற ஹெட்மாஸ்டர் போலீஸிடம் ஒப்படைப்பு

இதையடுத்து கல்வி அலுவலர்கள் பேக்கிரிக்கு செல்லும்போது, வழியில் தலைமையாசிரியர் தப்பியோட முயற்சித்துள்ளார். சுதாரித்து கொண்ட கல்வி அலுவலர், ஆசிரியர்கள் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தலைமையாசிரியரிடம் ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும், அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு முடிந்து தற்போது கடந்த ஜுன் மாதம் மீண்டும் பணியில் சேர்ந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசு சார்பில் நெசவாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரன் ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு, பராமரிப்புகுழு நிதி கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி ஆணவங்களை பள்ளியில் ஒப்படைக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கல்வித்துறை அலுவலர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் ஆவணங்கள் ஏதும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைத்துள்ளார். இது குறித்து தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது ஆவணங்களைத் தனது வீட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து கல்வி அலுவலர்கள் ஆவணங்களை வாங்க தலைமையாசிரியரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது ஆவணங்கள் வீட்டில் இல்லை பேக்கரி ஒன்றில் உள்ளதாக கூறியுள்ளார்.

தப்பியோட முயன்ற ஹெட்மாஸ்டர் போலீஸிடம் ஒப்படைப்பு

இதையடுத்து கல்வி அலுவலர்கள் பேக்கிரிக்கு செல்லும்போது, வழியில் தலைமையாசிரியர் தப்பியோட முயற்சித்துள்ளார். சுதாரித்து கொண்ட கல்வி அலுவலர், ஆசிரியர்கள் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தலைமையாசிரியரிடம் ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும், அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு முடிந்து தற்போது கடந்த ஜுன் மாதம் மீண்டும் பணியில் சேர்ந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசு சார்பில் நெசவாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி

Intro:Body:tn_erd_03_sathy_headmaster_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளி தலைமையாசிரியர் பள்ளி ஆவணங்களை முறைகேடாக எடுத்து வந்தாகக்கூறி கல்வி அதிகாரி உட்பட ஆசிரியர்;கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையிடம் ஒப்படைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சுண்டப்பூர் மலைவாழ் மக்கள் கிராமத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சந்திரன் என்பவர் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு பராமரிப்புகுழு நிதி கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி ஆணவங்களை முறைகேடாக எடுத்து வந்து பள்ளியில் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கல்வித்துறை அலுவலர் ஆய்வு மேற்கொண்டபோது ஆவணங்கள் பள்ளியில் இல்லாமல் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் தலைமையாசிரியர் சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கு தன் வீடான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளைத்தில் ஆவணங்கள் உள்ளதாக தொரிவித்துள்ளார். திரும்ப ஒப்படைக்கும் படி கல்வி அலுவலர் பலமுறை எச்சரிக்கை அளித்தும் பள்ளியில் ஒப்படைக்காத காரணத்தால் வீட்டிற்கு சென்று வாங்கிவிடாம் என்றும் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்ற போது ஆவணங்கள் வீட்டில் இல்லை பேக்கரில் ஒன்றில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பேக்கரிக்கு தலைமையாசிரியரை அழைத்து வந்து ஆவணங்களை பெற்றுவிடலாம் என்ற எண்ணதில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே தலைமையாசிரியரை அழைத்து வந்த போது அவர்களிடமிருந்து தப்யோட முயற்சித்துள்ளார். சுதாரித்த கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் துரத்திப்பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு கூடினர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் தலைமையாசிரியர் சந்திரனை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமையாசிரியர் சந்திரன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பதும் அப்போது பணியிட நீக்கம் செய்யப்பட்டு வழக்கு முடிந்து தற்போது ஜுன் மாதத்தில் தான் பணியில் சேர்ந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.