ETV Bharat / state

ஓட்டுநரை தரக்குறைவாகப் பேசிய அரசு ஊழியர்... மன்னிப்பு கேட்கும் வரை தர்ணா..

அரசு ஊழியர் தன்னை தரக்குறைவாகப் பேசியதால், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அலுவலகம் முன்பு ஓட்டுநர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

author img

By

Published : Jun 20, 2021, 8:07 AM IST

வாகன ஓட்டுநர்  அரசு வாகன ஓட்டுநர்  Government employee protest  government driver protest  வாகன ஓட்டுநரை தரக்குறைவாக பேசிய அரசு ஊழியர்  ஈரோடு வாகன ஓட்டுநரை தரக்குறைவாக பேசிய அரசு ஊழியர்  ஈரோடு செய்திகள்  வாகன ஓட்டுநர் போராட்டம்  வாகன ஓட்டுநர்  போராட்டம்  protest  driver protest  erode government driver protest  erode news  erode latest news
வாகன ஓட்டுநரை தரக்குறைவாகப் பேசிய அரசு ஊழியர்....மன்னிப்பு கேட்கும் வரை தர்ணா

ஈரோடு: கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிபவர் துளசி சாமிநாதன். கடந்த ஓர் ஆண்டாக, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வாகன ஓட்டுநர் பணியிடம் காலியாக உள்ளதை அறிந்த சாமிநாதன், அப்பணிக்காக விண்ணப்பித்து உள்ளார்.

தற்போது கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக லட்சுமி உள்ளார். அவரது கணவர் ராஜேந்திரன் மின்சாரத் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சாமிநாதனின் பணி நிரந்தரம் செய்யப்பட இருப்பதை அறிந்த ராஜேந்திரன், அவரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை தரக்குறைவாகப் பேசிய ராஜேந்திரனை கண்டித்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அலுவலகம் முன்பு சாமிநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் ராஜேந்திரன் தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை தர்ணா போராட்டத்தை விடப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், நேரில் வந்து ஓட்டுநர் சுவாமிநாதனிடம் மன்னிப்பு கேட்ட பிறகு அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

இதையும் படிங்க: 6-8 வாரங்களில் மூன்றாவது அலை!

ஈரோடு: கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிபவர் துளசி சாமிநாதன். கடந்த ஓர் ஆண்டாக, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வாகன ஓட்டுநர் பணியிடம் காலியாக உள்ளதை அறிந்த சாமிநாதன், அப்பணிக்காக விண்ணப்பித்து உள்ளார்.

தற்போது கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக லட்சுமி உள்ளார். அவரது கணவர் ராஜேந்திரன் மின்சாரத் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சாமிநாதனின் பணி நிரந்தரம் செய்யப்பட இருப்பதை அறிந்த ராஜேந்திரன், அவரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை தரக்குறைவாகப் பேசிய ராஜேந்திரனை கண்டித்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அலுவலகம் முன்பு சாமிநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் ராஜேந்திரன் தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை தர்ணா போராட்டத்தை விடப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், நேரில் வந்து ஓட்டுநர் சுவாமிநாதனிடம் மன்னிப்பு கேட்ட பிறகு அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

இதையும் படிங்க: 6-8 வாரங்களில் மூன்றாவது அலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.