ETV Bharat / state

மாயாற்றில் பயணம் வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை - forest department

ஈரோடு: கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் பரிசல் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

erode
author img

By

Published : Aug 8, 2019, 5:03 PM IST

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனத்தையொட்டி தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவரும் இக்கிராமத்தையொட்டி மாயாறு ஓடுகிறது.

இந்த ஆற்றில் பாலம் ஏதும் இல்லாததால் பரிசல்களையே இந்த கிராம மக்கள் நம்பியுள்ளனர்.

இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், இக்கிராமத்துக்கும் பவானிசாகருக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள்

இதனிடையே, வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் இக்கிராம மக்கள் பரிசல்களில் அபாயமான பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனையடுத்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் பரிசல் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனத்தையொட்டி தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவரும் இக்கிராமத்தையொட்டி மாயாறு ஓடுகிறது.

இந்த ஆற்றில் பாலம் ஏதும் இல்லாததால் பரிசல்களையே இந்த கிராம மக்கள் நம்பியுள்ளனர்.

இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், இக்கிராமத்துக்கும் பவானிசாகருக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள்

இதனிடையே, வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் இக்கிராம மக்கள் பரிசல்களில் அபாயமான பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனையடுத்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் பரிசல் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:Body:tn_erd_0d_sathy_mayaru_river_vis_tn10009
tn_erd_0e_sathy_mayaru_river_vis_tn10009

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு:

கரைபுரண்யோடும் மாயாற்றில் நாட்டுப்படகு மூலம் ஆபத்தான பயணத்தை தவிர்க்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்



சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனத்தையொட்டி தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றிலும் மலைமுகடுகள் மற்றும் மாயாறு ஓடுகிறது. கிராமமக்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும் சாகுபடி செய்த விளைபொருள்களை சமவெளப் பகுதியான சத்தியமங்கலத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வார்கள். இக்கிராமத்துக்கு தேவையான ரேசன் பொருள்கள் லாரி மூலம் மாயற்றை தாண்டி எடுத்துச் செல்வர். இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தெங்குமரஹாடா கிராமத்துக்கும் பவானிசாகர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று மாலை முதலே வெள்ளம் அதிகமாக இருப்பதால் கிராமமக்கள் நாட்டு படகு மூலம் கரையை கடந்து செல்கின்றனர். பாய்ந்து வரும் வெள்ளத்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் ஆற்றை கடக்க கிராமமக்கள் தயங்குகின்றனர்.இருப்பினும் வேறு வழியின்றி மாயாற்றில் வெள்ளம் தணியும் காத்திருக்க வேண்டியுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஆபத்தான பயணம்மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற வெள்ள அபாய காலங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்கக, புதிய பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.