ETV Bharat / state

சாக்கடை குழியில் விழுந்த குதிரை - போராடி மீட்ட தீயணைப்பு துறை! - தீயணைப்பு துறையினர் குதிரையை மீட்டனர்

சத்தியமங்கலத்தில் சாக்கடை குழியில் விழுந்து சிக்கி தவித்த குதிரையை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.

குதிரையை மீட்ட தீயணைப்பு துறை
குதிரையை மீட்ட தீயணைப்பு துறை
author img

By

Published : Nov 13, 2020, 12:02 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் பாக்கியலட்சுமி நகர் பகுதியிலுள்ள நூலகம் அருகே தேங்கியிருந்த சாக்கடை நீர் குழியில் இன்று(நவ.13) அதிகாலை குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது. குழியிலிருந்து மேலே ஏற முடியாமல் குதிரை தவித்துக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாக்கடை குழியில் சிக்கி தவித்த குதிரையை கயிறு கட்டி சுமார் அரை மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர். சாக்கடை குழியில் சிக்கி உயிருக்கு போராடிய குதிரையை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் பாக்கியலட்சுமி நகர் பகுதியிலுள்ள நூலகம் அருகே தேங்கியிருந்த சாக்கடை நீர் குழியில் இன்று(நவ.13) அதிகாலை குதிரை ஒன்று விழுந்து சிக்கிக்கொண்டது. குழியிலிருந்து மேலே ஏற முடியாமல் குதிரை தவித்துக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாக்கடை குழியில் சிக்கி தவித்த குதிரையை கயிறு கட்டி சுமார் அரை மணி நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர். சாக்கடை குழியில் சிக்கி உயிருக்கு போராடிய குதிரையை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

குதிரையை மீட்ட தீயணைப்பு துறை

இதையும் படிங்க: இது எனது கடைசி தேர்தல் அல்ல... அந்தர்பல்டி அடித்த நிதிஷ்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.