ETV Bharat / state

ஈரோட்டில் பாசமலர் - நிலைக்காத மகிழ்ச்சி...நடந்தது என்ன?

author img

By

Published : Feb 26, 2022, 10:55 AM IST

Updated : Feb 26, 2022, 12:26 PM IST

அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

erode-school-girl-sucide
erode-school-girl-sucide

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாமிக்கண்ணு. இவருக்கு மகன் ஜீவானந்தம் (20), மகள் பவித்ரா (15) என இரண்டு குழந்தைகள். ஜீவானந்தம் கோவையிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த பிப். 7ஆம் தேதி காலை தனது நண்பர் பன்னீர்செல்வம் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது, பவானிசாகர் அருகே வெள்ளியம்பாளையம் என்ற இடத்தில் ஜீவானந்தம் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்தில் சிக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே ஜீவானந்தம் உயிரிழந்தார்.

இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர், ஜீவானந்தத்திற்கு இறப்பு சடங்குகள் நடந்தன. இந்நிலையில் மறைந்த ஜீவானந்தத்தின் தங்கை பவித்ரா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அண்ணன் இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்டார்.

பின்னர், 22ஆம் தேதி இரவு, அண்ணன் மறைந்த துக்கம் தாளாமல் வீட்டில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இரண்டு நாள்கள் மருத்துவமனையில் இருந்த பவித்ரா, நேற்று (பிப். 25) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணன் விபத்தில் உயிரிழந்த துக்கம் தாளாமல் தங்கை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதையும் படிங்க : காவலர்களைக் கடித்த அஜித் ரசிகர்கள்: இருவர் கைது

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாமிக்கண்ணு. இவருக்கு மகன் ஜீவானந்தம் (20), மகள் பவித்ரா (15) என இரண்டு குழந்தைகள். ஜீவானந்தம் கோவையிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த பிப். 7ஆம் தேதி காலை தனது நண்பர் பன்னீர்செல்வம் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது, பவானிசாகர் அருகே வெள்ளியம்பாளையம் என்ற இடத்தில் ஜீவானந்தம் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்தில் சிக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே ஜீவானந்தம் உயிரிழந்தார்.

இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர், ஜீவானந்தத்திற்கு இறப்பு சடங்குகள் நடந்தன. இந்நிலையில் மறைந்த ஜீவானந்தத்தின் தங்கை பவித்ரா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அண்ணன் இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்டார்.

பின்னர், 22ஆம் தேதி இரவு, அண்ணன் மறைந்த துக்கம் தாளாமல் வீட்டில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இரண்டு நாள்கள் மருத்துவமனையில் இருந்த பவித்ரா, நேற்று (பிப். 25) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணன் விபத்தில் உயிரிழந்த துக்கம் தாளாமல் தங்கை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதையும் படிங்க : காவலர்களைக் கடித்த அஜித் ரசிகர்கள்: இருவர் கைது

Last Updated : Feb 26, 2022, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.