ஈரோடு: சத்தியமங்கலம் மஹ்முதியா அரசு நிதியுதவி துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் வஃக்பு வாரியம் வழங்கிய ரூ.5 லட்சம் மானியத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் திறப்பு விழாவில் தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் பங்கேற்று புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக வஃக்பு வாரியத்தலைவர் அப்துல் ரஹ்மானை முத்தவல்லி அஹ்லே தக்னி சுன்னத் ஜமாத் தலைவர் நிதிமுல்லாக்கான் தலைமையில் நிர்வாகிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அப்துல் ரஹ்மான் பேசுகையில், 'இறைவன் பெயரால் சான்றோர் அர்ப்பணித்த வஃக்பு வாரிய சொத்துகளை பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தும், போலியான ஆவணங்கள் தயாரித்தும் விற்றுள்ளனர்.
இதுபோன்ற போலியாக விற்கப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதில் வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் முதலமைச்சர் தலைமையில் நடந்த வஃக்பு வாரிய கூட்டத்தில் வஃக்பு சொத்துகள் முறையாக பாதுகாப்பதிலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதிலும் முறையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டது.