ETV Bharat / state

தேர்தலைப் புறக்கணிக்க நினைத்தவர்களும் மனம் மாறி வாக்களித்துள்ளனர் - ஈரோடு மாவட்ட ஆட்சியர் - ஈரோட்டில் பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர்

ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தவர்களும் வாக்களித்து வருகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி
மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி
author img

By

Published : Dec 30, 2019, 11:23 PM IST

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலானது அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்று வரும் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி. கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கதிரவன், "தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காட்டைக் காட்டிலும் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கும். தேர்தலைப் புறக்கணித்த நினைத்தவர்களும் மனம் மாறி வாக்களித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி

மேலும், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கர் ஊராட்சி ஒன்றாவது வார்டில் உள்ள சுஜில் குட்டை மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் ஒன்றாவது வார்டில் வார்டு வரைமுறையால் ஏற்பட்ட குழப்பத்தால் தேர்தலை சிறிது நேரம் புறக்கணித்திருந்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலானது அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்று வரும் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி. கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கதிரவன், "தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காட்டைக் காட்டிலும் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கும். தேர்தலைப் புறக்கணித்த நினைத்தவர்களும் மனம் மாறி வாக்களித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி

மேலும், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கர் ஊராட்சி ஒன்றாவது வார்டில் உள்ள சுஜில் குட்டை மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம் ஒன்றாவது வார்டில் வார்டு வரைமுறையால் ஏற்பட்ட குழப்பத்தால் தேர்தலை சிறிது நேரம் புறக்கணித்திருந்தனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச30

தேர்தலை புறக்கணித்தவர்களும் வாக்களித்து வருகிறார்கள் - மாவட்ட ஆட்சியர் கதிரவன்!

பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை புறக்கணிப்பதாக கூறியவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருவதாகவும் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் அந்தியூர், அம்மாபேட்டை,, பவானி, பெருந்துறை சென்னிமலை, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு வந்த போது 95 வயது மூதாட்டி தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியே வருவதைக் கண்ட ஆட்சியர் அந்தப் பாட்டிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவிலும் முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதைக் கண்ட அவர் தேர்தல் அலுவலர்கள் காலை முதல் இதுவரை வாக்களித்த முதியவர்கள் விபரத்தைக் கேட்டறிந்தார்.

Body:இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் கதிரவன், தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதத்தைக் காட்டிலும் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதற்குரிய சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Conclusion:மேலும் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக கூறியவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருவதாகவும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

பேட்டி : சி.கதிரவன் – மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.