ETV Bharat / state

விளைநிலங்களுக்குள் புகுந்த பயிர்களைச் சேதப்படுத்திய காட்டு யானைகள் - elephant damages agriculture land

ஈரோடு: சத்தியமங்கலம் தாளவாடி அருகேயுள்ள கரளவாடிபகுதியில் விவசாய நிலங்களில் புகுந்த ஏழு காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த முட்டை கோஸ், வாழை உள்ளிட்டவற்றை நாசப்படுத்தின.

தாளவாடி காட்டு யானை  சத்தியமங்கலம் செய்திகள்  elephant damages agriculture land  thalavadi elephant damages
காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்கள்
author img

By

Published : Feb 4, 2020, 8:58 PM IST

ஜீரஹள்ளி வனச்சரகத்திக்கு உள்பட்ட கரளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகாதேவபிரசாத். இவர், தனது விவசாய நிலத்தில் முட்டை கோஸ், வாழை ஆகியவற்றைப் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், கரளவாடி வனப்பகுதியிலிருந்து வந்த ஏழு காட்டு யானைகள் அவருடைய விளைநிலங்களிலில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த முட்டை கோஸை மிதித்தும் தின்றும் நாசம் செய்தன.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்த தென்னை மரங்களையும் முறித்து சேதப்படுத்தின. தோட்டத்தில் யானைகள் தஞ்சம் புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் ஒன்றுதிரண்டு பட்டாசு வெடித்தும் தீ பந்தம் காட்டியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்கள்

ஆனால், யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ச்சியாக பயிர்களை நாசம் செய்தன. கிராம மக்கள் மற்றும் வனத்துறையினரின் தொடர் முயற்சியால் 3 மணி நேரப் போராட்டத்திக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. யானை விளைநிலங்களில் புகுந்ததில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முட்டைகோஸ், 20 தென்னை மரங்கள் மற்றும் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் உள்ளிட்டவை நாசமாயின.

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மிகுந்த வேதனையடையும் விவசாயிகள், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ - அமைச்சர் ஜெயக்குமார்

ஜீரஹள்ளி வனச்சரகத்திக்கு உள்பட்ட கரளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மகாதேவபிரசாத். இவர், தனது விவசாய நிலத்தில் முட்டை கோஸ், வாழை ஆகியவற்றைப் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், கரளவாடி வனப்பகுதியிலிருந்து வந்த ஏழு காட்டு யானைகள் அவருடைய விளைநிலங்களிலில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த முட்டை கோஸை மிதித்தும் தின்றும் நாசம் செய்தன.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்த தென்னை மரங்களையும் முறித்து சேதப்படுத்தின. தோட்டத்தில் யானைகள் தஞ்சம் புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த வனத்துறையினர் விவசாயிகளுடன் ஒன்றுதிரண்டு பட்டாசு வெடித்தும் தீ பந்தம் காட்டியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்கள்

ஆனால், யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ச்சியாக பயிர்களை நாசம் செய்தன. கிராம மக்கள் மற்றும் வனத்துறையினரின் தொடர் முயற்சியால் 3 மணி நேரப் போராட்டத்திக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. யானை விளைநிலங்களில் புகுந்ததில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த முட்டைகோஸ், 20 தென்னை மரங்கள் மற்றும் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் உள்ளிட்டவை நாசமாயின.

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மிகுந்த வேதனையடையும் விவசாயிகள், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ - அமைச்சர் ஜெயக்குமார்

Intro:Body:tn_erd_03_sathy_elephant_damages_vis_tn10009

தாளவாடி அருகே மீண்டும் யானைகள் அட்டகாசம்: விவசாய நிலங்களில் காட்டுயானைகள் புகந்து முட்டைகோஸ், தென்னைமரம் சேதம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகம் கரளவாடி விவசாய நிலங்களில் யானை புகுந்து முட்டைகோஸ், தென்னை மரங்களை சேதப்படுத்தின. 3 மணி நேர போராட்டத்துக்கு பின் யானைகள் காட்டுக்குள் விரட்டினர்.

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அவ்வவ்போது ஊருக்குள புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்துகின்றன. இரவு நேரங்களில் காவலுக்கு செல்லும் கிராமமக்களை தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. ஜீரஹள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகாதேவபிரசாத். இவர் விவசாய நிலத்தில் முட்டைகோஷ் ,தென்னை வாழை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் கரளவாடி வனப்பகுதியில் இருந்து வந்த 7 யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து அங்து சாகுபடி செய்த முட்டைகோஸை மிதித்தும் தின்றும் நாசம் செய்தன. அதனைத்தொடர்ந்து தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தின. தோட்டத்தில் யானைகள் தஞ்சம் புகுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் ஒன்றுதிரண்டு சப்தம் போட்டனர். பட்டாசு வெடித்தும் தீ பந்தம் காட்டியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தென்னை மற்றும் முட்டைகோஷ், வாழை பயிர்களை நாசம் செய்தது. கிராமமக்கள் மற்றும் வனத்துறையினரின் தொடர் முயற்சியால் 3 மணி நேர போராட்டத்திக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. யானை மிதித்து நாசம் செய்ததில் 2 ஏக்கர் முட்டைகோஸ், 20 தென்னை மரங்கள் மற்றும் அரை ஏக்கர் வாழைமரங்கள் சேதமடைந்தன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம்செய்வது தெடர்கதையாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .வனவிலங்குகளால் சேதமடையும் சாகுபடி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.