ETV Bharat / state

'இந்தியாவே வியக்கும் அளவுக்கு தமிழ்நாடு திகழ்கிறது' - அமைச்சர் செங்கோட்டையன் - Education Minister Sengottaiyan

ஈரோடு: இந்தியாவே வியக்கும் அளவுக்கு தமிழ்நாடு வளர்ந்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கை பொருத்தவரை முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

education-minister-sengottaiyan
education-minister-sengottaiyan
author img

By

Published : Dec 23, 2019, 1:10 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், துறையம்பாளையம், கொங்கர்பாளையம், வினோபாநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வாகனத்தில் நின்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளதாகவும், அதுபோல் ஊராட்சிகளில் மேன்மேலும் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற வேண்டுமெனில் அதிமுக சார்பில் போட்டிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்தார்.

மைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கை பொருத்தவரை தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அந்நிய முதலீடு ஈட்டி 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கரும்பலகைகள் அமைக்கவும் 7500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளும் 750 பள்ளிகளில் அட்டல் டிக்கர் லேப் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் மக்கள் ஆரவாரமாக வரவேற்பதாகவும் இந்த செயல்கள் அரசின் நல்மதிப்பை காட்டுவதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி பெரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

அதிரடியாக இறங்கி போக்குவரத்தை சீர் செய்த இளைஞர்கள்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், துறையம்பாளையம், கொங்கர்பாளையம், வினோபாநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வாகனத்தில் நின்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளதாகவும், அதுபோல் ஊராட்சிகளில் மேன்மேலும் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற வேண்டுமெனில் அதிமுக சார்பில் போட்டிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்தார்.

மைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கை பொருத்தவரை தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அந்நிய முதலீடு ஈட்டி 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கரும்பலகைகள் அமைக்கவும் 7500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளும் 750 பள்ளிகளில் அட்டல் டிக்கர் லேப் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் மக்கள் ஆரவாரமாக வரவேற்பதாகவும் இந்த செயல்கள் அரசின் நல்மதிப்பை காட்டுவதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி பெரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

அதிரடியாக இறங்கி போக்குவரத்தை சீர் செய்த இளைஞர்கள்!

Intro:Body:tn_erd_01_sathy_kas_minister_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் செயல்பட்டுத்தப்பட்ட நலத்திட்டங்களையும் உள்ளாட்சிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு பகுதிகளிலும் தங்கள் கட்சிகளின் பலத்தைக்காட்ட ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு விதங்களில் வாக்காளர்களை கவர்திழுந்து கூட்டத்தை கூட்டிவருகின்றனர். அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பிரதிநிதிகள் ஊராட்சி கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் மும்மரம் காட்டிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் துறையம்பாளையம் கொங்கர்பாளையம் வினோபாநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டிடும் வேட்பாளைர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வாகனத்தில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அந்தந்த ஊராட்சிகளில் போட்டிடும் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட உறுப்பினர் என அனைவருக்கும் அவரவர்கள் சின்னங்களில் வாக்களிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு ஊராட்சிகளுக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்துள்ளதாகவும் அது போல் ஊராட்சிகளில் மேன்மேலும் வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற வேண்டுமெனில் அதிமுக சார்பில் போட்டிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் மாநில வர்த்தக அணிச்செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். பிரச்சாத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இந்தியநாடே வியக்கும் அளவிற்கு தமிழகம் வளர்ந்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கை பொருத்தவரை தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழக்ததில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அன்னிய முதலீடு ஈட்டி 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கலவித்துறையில் மத்திய அரசு இன்னும் இரண்டு நாட்களில் ஒப்புதல் வழங்கவுள்ளது. அதில் 72 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கரும்பலகைகள் அமைக்கவும் 7500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளும் 750 பள்ளிகளில் அட்டல் டிக்கர் லேப் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்;. மேலும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரவாரமாகவும் மகிழ்சியுடனும் வரவேற்பதாகவும் இந்த செயல்கள் அரசின் நல்மதிப்பை காட்டுவதாகவும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி பெரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.