ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி முகாம்!

author img

By

Published : Nov 4, 2020, 3:47 PM IST

ஈரோடு: மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில், ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதி மக்களுக்காகச் சிறப்பு குறை தீர்க்கும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி முகாம்!
மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி முகாம்!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாரந்தோறும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்த போதிலும், மக்கள் வசிப்பிடங்களுக்கு அரசு அலுவலர்கள் நேரிடையாகச் சென்று மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு குறை தீர்க்கும் மனு நீதி நாள் முகாம் ஈரோடு அருகேயுள்ள சூரம்பட்டி பகுதி மக்களுக்காக சூரம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அப்பகுதி மக்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை, புதிய குடும்ப அட்டை, முதியோர் திட்ட உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டதுடன், ஓய்வூதியத் தொகை பெறும் ஆதரவற்ற முதியோருக்கு தீபாவளிப் பண்டிகை கால விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாரந்தோறும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்த போதிலும், மக்கள் வசிப்பிடங்களுக்கு அரசு அலுவலர்கள் நேரிடையாகச் சென்று மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு குறை தீர்க்கும் மனு நீதி நாள் முகாம் ஈரோடு அருகேயுள்ள சூரம்பட்டி பகுதி மக்களுக்காக சூரம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அப்பகுதி மக்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை, புதிய குடும்ப அட்டை, முதியோர் திட்ட உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டதுடன், ஓய்வூதியத் தொகை பெறும் ஆதரவற்ற முதியோருக்கு தீபாவளிப் பண்டிகை கால விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.