இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்தி செய்திகளை நம்பி மக்களும் பீதியடைந்துள்ளனர்.
இதனால், கொரனோ தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மக்கள் அனைவரும் கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது. அந்தவகையில் ஈரோடு ரயில்வே சைல்டு லைன், தென்னக ரயில்வே தூய்மைக்கான இயக்கம் சார்பில் ஈரோடு ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஈரோடு நாடக கொட்டகை அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள் கொரோனா வராமல் தடுப்பது குறித்தும் சுகாதாரம் குறித்தும் பொதுமக்களுக்கு இசை நடனம் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தப்படவில்லை' - முதலமைச்சர் விளக்கம்