ETV Bharat / state

‘ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்’ - இல. கணேசன்

author img

By

Published : Feb 8, 2020, 5:48 PM IST

Updated : Feb 8, 2020, 6:37 PM IST

ஈரோடு: ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதே தவிர எப்போது முடிவு எடுக்கவேண்டுமெனத் தெரிவிக்கவில்லை என்று பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

Erode bjp etvbharat  பாஜக இல கணேசன்  எழுவர் விடுதலை குறித்து இல கணேசன்  எழுவர் விடுதலை பாஜக நிலைப்பாடு  ஏழு தமிழர் விடுதலை  vijay it raid news  tnpsc fraud news
எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க வந்துள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தைப்பூசத் திருவிழாவிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை வைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

இந்து மதத்தின் பிரச்னைகளை மற்ற மதத்தினர் பேசுவதற்கு உரிமை இல்லை. சைமன் என்ற பெயரை வைத்துள்ள சீமான், மக்களை ஏமாற்றவும் தனது அரசியில் நாடகத்திற்காகவும் இதுபோன்ற கோரிக்கையை வைத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காது” என்றார்.

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடவேண்டும் என சீமான் கோரிக்கை வைத்திருப்பது வேடிக்கை

ஏழு தமிழர் விடுதலை குறித்து பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, ராஜீவ் கொலை வழக்கை சாதாரண வழக்காக பார்க்க முடியாது. இவ்வழக்கில் முந்தைய அரசு எந்த நிலைப்பாட்டில் உள்ளதோ அதே நிலைப்பாட்டில்தான் இப்போதைய அரசும் உள்ளது. சிறையில் உள்ள எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தபோது இது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எப்போது முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆளுநர் முடிவு எடுக்கும்வரை பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.

எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அதிமாகவே பணம் சிக்கியுள்ளது. வருமான வரித்துறையினர் அரசியல் பின்னணியில் இயங்குவதில்லை. வருமான வரித்துறையினர் அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியுள்ளனர்.

வருமான வரித்துறையினர் அரசியல் பின்னணியில் இயங்குவதில்லை

தேசிய அளவில் ஒரு மட்டமான கட்சியின் தலைவர் என்றால் அது ராகுல் காந்திதான். பிரதமர் இருக்கைக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. மக்களவையில் பிரதமர் மோடியின் எதிரே நின்று திருடன் என்ற வார்த்தையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவிற்கு கூடிய விரைவில் மாநில தலைவர் நியமிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏழு பேர் விடுதலை... ஆளுநர் அலுவலகம் கண்ணாமூச்சி விளையாடுகின்றன - பாலகிருஷ்ணன்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க வந்துள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தைப்பூசத் திருவிழாவிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை வைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

இந்து மதத்தின் பிரச்னைகளை மற்ற மதத்தினர் பேசுவதற்கு உரிமை இல்லை. சைமன் என்ற பெயரை வைத்துள்ள சீமான், மக்களை ஏமாற்றவும் தனது அரசியில் நாடகத்திற்காகவும் இதுபோன்ற கோரிக்கையை வைத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காது” என்றார்.

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடவேண்டும் என சீமான் கோரிக்கை வைத்திருப்பது வேடிக்கை

ஏழு தமிழர் விடுதலை குறித்து பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, ராஜீவ் கொலை வழக்கை சாதாரண வழக்காக பார்க்க முடியாது. இவ்வழக்கில் முந்தைய அரசு எந்த நிலைப்பாட்டில் உள்ளதோ அதே நிலைப்பாட்டில்தான் இப்போதைய அரசும் உள்ளது. சிறையில் உள்ள எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தபோது இது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர எப்போது முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிடவில்லை. ஆளுநர் முடிவு எடுக்கும்வரை பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.

எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அதிமாகவே பணம் சிக்கியுள்ளது. வருமான வரித்துறையினர் அரசியல் பின்னணியில் இயங்குவதில்லை. வருமான வரித்துறையினர் அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியுள்ளனர்.

வருமான வரித்துறையினர் அரசியல் பின்னணியில் இயங்குவதில்லை

தேசிய அளவில் ஒரு மட்டமான கட்சியின் தலைவர் என்றால் அது ராகுல் காந்திதான். பிரதமர் இருக்கைக்கு என்று ஒரு மரியாதை உள்ளது. மக்களவையில் பிரதமர் மோடியின் எதிரே நின்று திருடன் என்ற வார்த்தையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவிற்கு கூடிய விரைவில் மாநில தலைவர் நியமிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏழு பேர் விடுதலை... ஆளுநர் அலுவலகம் கண்ணாமூச்சி விளையாடுகின்றன - பாலகிருஷ்ணன்

Intro:ஈரோடு ஆனந்த்
பிப்.08

எழுவர் விடுதலையில் ஆளுநரின் முடிவை பொறுத்திருந்து பார்க்கலாம் - இல.கணேசன்!

எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது ஆளுநரின் முடிவை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் முன்னதாக ஈரோட்டில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தைப்பூச திருவிழாவுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாம்தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளதாகவும். இந்து மதத்தின் பிரச்சனைகளை மற்ற மதத்தினர் பேசுவதற்கு உரிமை இல்லை என்றும் கூறினார்.

சைமன் என்ற பெயர் வைத்துள்ள சீமான் மக்களை ஏமாற்ற தனது அரசியல் நாடகத்துக்காக இதுபோன்ற கோரிக்கையை வைத்தள்ளதாகவும் இதனை கண்டிப்பதாகவும் கூறினார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாகவும் அதிலும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியாக உள்ளதாகவும் தமிழக அரசு இந்த முறைகேட்டில் தேவைபட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதுடன் அவருடன் சேர்ந்து பலர் கொலை செய்யபட்டு உள்ளதால் இதனை சாதாரண வழக்காக பார்க்க முடியாது. இந்த பிரச்சனையில் முந்தைய அரசு எந்த நிலைப்பாட்டில் உள்ளதோ அதே நிலைப்பாட்டில் இப்போதைய அரசும் உள்ளதாகவும் இதில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்த போது இது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்ற குறிப்பிட்டுள்ளதே தவிர எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட வில்லை என்றும் ஆளுநர் முடிவு எடுக்கும் வரையில் பொறுத்து இருக்க வேண்டும் என்று கூறினார்.

நடிகர் விஜய் உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தேடியதற்கு அதிகமாகவே பணம் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் அரசியல் பின்னணியில் இயங்குவது இல்லை என்றும் வருமான வரித்துறையினரின் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதாகவும் இந்த சோதனைக்கு பின்னால் எந்தவிதமான அரசியல் பின்னணியும் இல்லை என்றும் கூறினார்.

தேசிய அளிவில் ஒரு மட்டமான கட்சியின் தலைவர் என்றால் அது ராகுல் காந்தி தான் என்றும் பிரதமர் இருக்கைக்கு என்று ஒரு மரியாதை உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியின் எதிரே நின்று திருடன் என்ற வார்தையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் திமுக ஒரு நாத்திக கட்சி இல்லை என்றும் திமுகவில் உள்ளவர்களில் பலர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதாகவும் பொதுமக்கள் ஏற்கொள்ளும் நிகழ்ச்சியை திமுகவினர் புறக்கணித்துள்ளதாகவும் கூறினார்.

பாரதிய ஜனதாக கட்சிக்கு விரைவில் மாநில தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் அதை பற்றி தாங்களே கவலைப்படவில்லை என்றும் கூறினார். Body:பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர் மட்டுமே தலைவராக முடியும் என்றும் அதுவும் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளதாகவும் மத்திய தலைமை நினைத்தால் விதிகளில் மாற்றம் செய்து முடிவுகள் எடுக்கலாம் என்றும் கூறினார்.

Conclusion:அதேபோல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் உள்ளதாகவும் கூட்டணியில் இருந்து விலகும் அளவுக்கு இன்னும் சூழ்நிலை எதுவும் வரவில்லை என்றும் இல. கணேசன் கூறினார்..

பேட்டி- இல கணேசன்- பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்
Last Updated : Feb 8, 2020, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.