ETV Bharat / state

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் பரிதாப சாவு! - bike and lorry accident

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே, செங்கல் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரி மோதி மாணவன் பலி
author img

By

Published : Aug 31, 2019, 8:36 PM IST

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகம்பாளையம் பிரிவில் ஒரே இருசக்கர வாகனத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் லட்சுமணன், 10 ஆம் வகுப்பு மாணவர் மதன்குமார், கூலித்தொழிலாளி விஜய் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர்.

லாரி மோதியதில் உயிரிழந்த மாணவன்!

இந்நிலையில், எதிரே வந்த செங்கல் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 12ஆம் வகுப்பு மாணவரான லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிய இருவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த லட்சுமணின் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதும், தலைக்கவசம் அணியாமல் சென்றதும் தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகம்பாளையம் பிரிவில் ஒரே இருசக்கர வாகனத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் லட்சுமணன், 10 ஆம் வகுப்பு மாணவர் மதன்குமார், கூலித்தொழிலாளி விஜய் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர்.

லாரி மோதியதில் உயிரிழந்த மாணவன்!

இந்நிலையில், எதிரே வந்த செங்கல் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 12ஆம் வகுப்பு மாணவரான லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிய இருவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த லட்சுமணின் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதும், தலைக்கவசம் அணியாமல் சென்றதும் தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:tn_erd_04_sathy_student_death_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையம் பிரிவில் இருசக்கர வாகனம் மீது செங்கல் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகத்தில் சென்ற 12ஆம் வகுப்பு மாணவர் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. பத்தாம் வகுப்பு மாணவர் மதன்குமார் மற்றும் விஜய் என்ற வாலிபர் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையத்திலிருந்து கொளப்பலூர் பகுதிக்கு இருசக்கரவாகத்தில் சென்ற வடுகபாளையம் பகுதியைச்சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் லட்சுமணன் 10 ஆம் வகுப்பு மாணவர் மதன்குமார் மற்றும் கூலித்தொழிலாளி வாலிபரான விஜய் ஆகிய மூனறு பேரும் ஒரே இருசக்கர வாகத்தில் கொளப்பலூரை நோக்கி சென்றனர். இருசக்கர வாகனத்தை விஜய் ஓட்ட பின்னிருக்கையில் மாணவர்கள் லட்சுமணன் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரும் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வடுகபாளையம் பிரிவு அருகில் சென்ற போது எதிரே வந்த செங்கல் லாரி எதிர்பாராது விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 12ஆம் வகுப்பு மாணவரான லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 10ஆம் வகுப்பு மாணவர் மதன்குமார் மற்றும் விஜய் ஆகிய இருவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் இருவரையும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் உயிரிழந்த லட்சுமணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் இருசக்கர வாகத்தில் அதிவேகமாக சென்றதும் தலைக்கவசம் அணியாமல் சென்றதும் தான் உயிரிழப்புக்கு காரணம் என்று இங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். .


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.