ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு என பேனர் கட்டிய ஊர் மக்கள்!

ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் பேனர் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Dec 6, 2019, 6:29 PM IST

Struggling for Road Facility
Struggling for Road Facility

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது ஈசப்பாறை கிராமம். இக்கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இக்கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பேனர் அடித்து அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அந்தியூர் ஜீவா செட் தொடங்கி, அண்ணமார் பாளையம், செட்டியார் ஏரி, ஈசப்பாறை, முனியப்பன் கோயில் வழியாக மலைகருப்புசாமி கோவில் வரை செல்லும் தார்ச் சாலையானது சுமார் 6.4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இந்த தார்ச் சாலை அமைத்து சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தற்போது வரை இந்தச் சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக வாகனங்கள் சென்றுவர முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

எனவே, இந்த சாலையை செப்பனிடக் கோரி அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனால், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்து, பேனர் அடித்து அதனை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியுள்ளோம். எங்களுக்கு சாலையை சரி செய்து கொடுக்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேனர் கட்டும் ஊர்மக்கள்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பேனர் கட்டியவர்களிடம் பேச்சுவார்த்தை, நடத்தி பேனரை அகற்றினர். உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்து, அதனைப் பேனர் அடித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியது அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது ஈசப்பாறை கிராமம். இக்கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இக்கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பேனர் அடித்து அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அந்தியூர் ஜீவா செட் தொடங்கி, அண்ணமார் பாளையம், செட்டியார் ஏரி, ஈசப்பாறை, முனியப்பன் கோயில் வழியாக மலைகருப்புசாமி கோவில் வரை செல்லும் தார்ச் சாலையானது சுமார் 6.4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இந்த தார்ச் சாலை அமைத்து சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தற்போது வரை இந்தச் சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக வாகனங்கள் சென்றுவர முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

எனவே, இந்த சாலையை செப்பனிடக் கோரி அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனால், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்து, பேனர் அடித்து அதனை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியுள்ளோம். எங்களுக்கு சாலையை சரி செய்து கொடுக்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேனர் கட்டும் ஊர்மக்கள்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பேனர் கட்டியவர்களிடம் பேச்சுவார்த்தை, நடத்தி பேனரை அகற்றினர். உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்து, அதனைப் பேனர் அடித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியது அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்

Intro:ஈரோடு ஆனந்த்
டிச05

உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு என வட்டாட்சியர் அலுவலகத்தில் பேனர் கட்டிய ஊர் மக்கள்!

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பேனர் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஈசப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி கோரி போராட்டம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன் காரணமாக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் அடித்து அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில் அந்தியூர் ஜீவா செட் தொடங்கி அண்ணமார் பாளையம், செட்டியார் ஏரி, ஈசப்பாறை, முனியப்பன் கோவில், வழியாக மலைகருப்புசாமி கோவில் வரை செல்லும் தார் சாலையானது சுமார் 6.4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இந்த தார் சாலை அமைத்து சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது தற்போது வரை இந்த சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக வாகனங்கள் சென்றுவர முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. எனவே இந்த சாலையை செப்பனிட கோரி அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லை, எனவே தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு செய்து அதனை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியுள்ளோம், எங்களுக்கு சாலையை சரி செய்து கொடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.


Body:தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேனர் கட்டியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேனரை அகற்றினர்.

Conclusion:கிராமமக்கள் தேர்தல் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்து அதனை பேனர் அடித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டியது அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.