ETV Bharat / state

வெட்டி கடத்தலுக்கு தயாராக இருந்த 4 டன் செம்மரம் பறிமுதல்!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வெட்டி கடத்தலுக்கு தயாராக இருந்த 4 டன் செம்மரம் கட்டைகளைப் பறிமுதல்செய்த வனத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Jan 15, 2020, 9:22 AM IST

ready for smuggling
ready for smuggling

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வன ஆராய்ச்சி மையம் சார்பில் வாய்க்கால் புதூர் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 400 செம்மரம் செடிகள் நடவுசெய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களை வளர்த்து வனத் துறையினருக்கு ஒப்படைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவுசெய்யப்பட்ட இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்துள்ளன.

மரம் காய்ந்த பிறகு மரத்தை வனத் துறை மட்டுமே வெட்டி அகற்றும். அப்போது மரம் வளர்ப்புக்குத் தேவையான கட்டணத்தை வனத் துறை வழங்கும். இந்நிலையில் வனத் துறைக்குத் தெரியாமல் 20 டன் அளவில் சுமார் 200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.

மரம் கடத்துவது குறித்து ஈரோடு வனப் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஈரோடு வனப் பாதுகாப்புப்படை உதவி பாதுகாவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சம்பவயிடத்துக்கு சென்று ஆய்வுசெய்தனர்.

அப்போது மூர்த்தி தோட்டத்தில் உள்ள அறையில் 4 டன் அளவுள்ள மரங்கள் வெட்டி விற்பனைக்கு தயாராக இருந்துள்ளன. இதையடுத்து வனத் துறை அனுமதியின்றி செம்மரங்களை வெட்டியது, கடத்தலுக்குத் தயாராக இருந்தது குறித்து விசாரிக்கப்பட்டு மரத்தை பறிமுதல்செய்தனர்.

வெட்டி கடத்தலுக்குத் தயாராக இருந்த 4 டன் செம்மரம் பறிமுதல்

மேலும் இது குறித்து தோட்டத்து மேலாளர் பாலமணி என்பவரிடம் வனத் துறை, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரை எத்தனை டன் மரங்கள் விற்கப்பட்டன, எவருக்கு விற்கப்பட்டது, அதன் மதிப்பு என்ன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி, 2 மகன்களை கொலைசெய்த நகைக்கடை அதிபர் தற்கொலை முயற்சி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வன ஆராய்ச்சி மையம் சார்பில் வாய்க்கால் புதூர் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 400 செம்மரம் செடிகள் நடவுசெய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களை வளர்த்து வனத் துறையினருக்கு ஒப்படைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவுசெய்யப்பட்ட இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்துள்ளன.

மரம் காய்ந்த பிறகு மரத்தை வனத் துறை மட்டுமே வெட்டி அகற்றும். அப்போது மரம் வளர்ப்புக்குத் தேவையான கட்டணத்தை வனத் துறை வழங்கும். இந்நிலையில் வனத் துறைக்குத் தெரியாமல் 20 டன் அளவில் சுமார் 200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.

மரம் கடத்துவது குறித்து ஈரோடு வனப் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஈரோடு வனப் பாதுகாப்புப்படை உதவி பாதுகாவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சம்பவயிடத்துக்கு சென்று ஆய்வுசெய்தனர்.

அப்போது மூர்த்தி தோட்டத்தில் உள்ள அறையில் 4 டன் அளவுள்ள மரங்கள் வெட்டி விற்பனைக்கு தயாராக இருந்துள்ளன. இதையடுத்து வனத் துறை அனுமதியின்றி செம்மரங்களை வெட்டியது, கடத்தலுக்குத் தயாராக இருந்தது குறித்து விசாரிக்கப்பட்டு மரத்தை பறிமுதல்செய்தனர்.

வெட்டி கடத்தலுக்குத் தயாராக இருந்த 4 டன் செம்மரம் பறிமுதல்

மேலும் இது குறித்து தோட்டத்து மேலாளர் பாலமணி என்பவரிடம் வனத் துறை, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரை எத்தனை டன் மரங்கள் விற்கப்பட்டன, எவருக்கு விற்கப்பட்டது, அதன் மதிப்பு என்ன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி, 2 மகன்களை கொலைசெய்த நகைக்கடை அதிபர் தற்கொலை முயற்சி

Intro:Body:tn_erd_05_sathy_semmaram_tree_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே வெட்டி கடத்தலுக்கு தயாராக இருந்த 4 டன் செம்மரம் பறிமுதல்: வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வாய்க்கால்புதூர் மூர்த்தி என்பவரின் தோட்டத்தில் வெட்டி கடத்தலுக்கு தயாராக இருந்த 4 டன் செம்மரத்தை விளாமுண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வனஆராய்ச்சி மையம் சார்பில் வாய்க்கால் புதூர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 400 செம்மரம் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களை வளர்த்து வனத்துறையினருக்கு ஒப்படை வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட இந்த மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. மரம் காய்ந்தபிறகு மரத்தை வனத்துறை மட்டுமே வெட்டி அகற்றும். அப்போது மரம் வளர்ப்புக்கு தேவையான கட்டணத்தை வனத்துறை வழங்கும். இந்நிலையில் வனத்துறைக்கு தெரியாமல் 20 டன் அளவில் சுமார் 200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. மரம் கடத்துவது குறித்து ஈரோடு வனப்பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் ஈரோடு வனப்பாதுகாப்புப்படை உதவி பாதுகாவலர் ரவிசந்திரன் தலைமையில் சம்பவயிடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மூர்த்தி தோட்டத்தில் உள்ள அறையில் 4 டன் அளவுள்ள மரங்கள் வெட்டி விற்பனைக்கு தயாராக இருந்தது. வனத்துறை அனுமதியின்றி வெட்டியது மற்றும் கடத்தலுக்கு தயாராக இருந்தது குறித்து விசாரிக்கப்பட்டு மரத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து தோட்டத்து மேலாளர் பாலமணி என்பவரிடம் வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது எந்த டன் மரங்கள் விற்கப்பட்டது எவருக்கு விற்கப்பட்டது அதன் மதிப்பு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.