ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார்(16). இவர் திங்iகள்கிழமை இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் சென்றுவிட்டு தொட்டம்பாளையம் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த புவனேந்திரன்(17), அவரது நண்பர் டிலக்சன்(18) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் முடுக்கன்துறை என்ற இடத்தில் வந்தபோது, இந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதில் தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் டிலக்சன் காயமடைந்தார். தலைக்கவசம் அணியாததால் சதீஸ்குமார் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக புவனேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: டீக்கடையில் கும்பலாக திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி