ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருட்டு! - Erode District News

ஈரோடு அருகே மரங்களை வாடகைக்கு விடுபவரின் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் திருட்டு
author img

By

Published : Oct 18, 2020, 3:04 PM IST

ஈரோடு அருகேயுள்ள 46 புதூர் வள்ளிகார்டன் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பரமசிவம் அம்சவேணி. பரமசிவம் கான்கிரீட் பணிக்காக முட்டு மரங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார்.
இவரது மகன் வெளியூரில் பணிபுரிந்து வருவதால் பரமசிவமும், அவரது மனைவியும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

வழக்கம்போல் நேற்றிரவு (அக்.17) பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவர் உணவருந்தி விட்டு வீட்டு முதல் மாடியில் உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (அக்.18) அதிகாலை வீட்டு வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்காக கீழிறங்கிய அவரது மனைவி வீட்டு முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், கீழ் அறையிலுள்ள பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மேல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி தகவலைத் தெரிவித்துள்ளார்.
பரமசிவமும் கீழிறங்கி வந்து கடும் அதிர்ச்சியடைந்ததை அடுத்து, தாலூகா காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனர்.

திருட்டு நடந்த வீடு
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் மேல்மாடியில் உறங்கச் செல்வதை உறுதி செய்து கொண்டு கீழ் அறையிலுள்ள பீரோவை உடைத்து பொருட்களைத் திருடிச் சென்றவர்கள் பரமசிவத்திற்கு அறிமுகமானவர்களாக இருந்திட வேண்டும் என்பதும், பரமசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதும் காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடியிருப்பு மிகுந்த பகுதியில் காவல்துறையினர் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதிகளில் மாடுகள் திருடிய 3 பேர் கைது; 6 பசுமாடுகள் மீட்பு

ஈரோடு அருகேயுள்ள 46 புதூர் வள்ளிகார்டன் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பரமசிவம் அம்சவேணி. பரமசிவம் கான்கிரீட் பணிக்காக முட்டு மரங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார்.
இவரது மகன் வெளியூரில் பணிபுரிந்து வருவதால் பரமசிவமும், அவரது மனைவியும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.

வழக்கம்போல் நேற்றிரவு (அக்.17) பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவர் உணவருந்தி விட்டு வீட்டு முதல் மாடியில் உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (அக்.18) அதிகாலை வீட்டு வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்காக கீழிறங்கிய அவரது மனைவி வீட்டு முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், கீழ் அறையிலுள்ள பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மேல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி தகவலைத் தெரிவித்துள்ளார்.
பரமசிவமும் கீழிறங்கி வந்து கடும் அதிர்ச்சியடைந்ததை அடுத்து, தாலூகா காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனர்.

திருட்டு நடந்த வீடு
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் மேல்மாடியில் உறங்கச் செல்வதை உறுதி செய்து கொண்டு கீழ் அறையிலுள்ள பீரோவை உடைத்து பொருட்களைத் திருடிச் சென்றவர்கள் பரமசிவத்திற்கு அறிமுகமானவர்களாக இருந்திட வேண்டும் என்பதும், பரமசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதும் காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றுள்ள கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடியிருப்பு மிகுந்த பகுதியில் காவல்துறையினர் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதிகளில் மாடுகள் திருடிய 3 பேர் கைது; 6 பசுமாடுகள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.