தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சாலையில் தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிறுமுகையில் இருந்து சரக்கு வாகனத்தில் வந்த பழனிசாமியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அரசு கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: இயக்குநரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்!