ETV Bharat / state

பழனியில் பயிர்களைச் சேதப்படுத்திய காட்டு யானை - விவசாயிகள் அச்சம்!

author img

By

Published : Oct 12, 2019, 10:20 PM IST

பழனி: ஆயக்குடி அருகே பயிர்களைச் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

பழனியில் காட்டுயானை அட்டகாசம், Wildelephant damaging crops in Palani

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆயக்குடி அருகே உள்ள கோம்பைப்பட்டி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள தோட்டங்களில் விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளன.

கடந்த சில வாரங்களாக யானைகள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் யானைகள் அதே பகுதியில் உள்ள விவசாயி வேலுசாமி என்பவரது தோட்டத்தில் புகுந்து தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி சென்றுள்ளது.

பழனியில் காட்டுயானை அட்டகாசம், Wildelephant damaging crops in Palani

வேலுசாமி வழக்கம்போல் தோட்டத்துக்குச் சென்று பார்க்கும்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள், வாழை மரங்கள் முறிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து கோம்பைப்பட்டி பகுதியில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளை: மாஸ்டர் பிளான் முருகனிடம் காவல் துறை விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆயக்குடி அருகே உள்ள கோம்பைப்பட்டி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள தோட்டங்களில் விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்துள்ளன.

கடந்த சில வாரங்களாக யானைகள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் யானைகள் அதே பகுதியில் உள்ள விவசாயி வேலுசாமி என்பவரது தோட்டத்தில் புகுந்து தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி சென்றுள்ளது.

பழனியில் காட்டுயானை அட்டகாசம், Wildelephant damaging crops in Palani

வேலுசாமி வழக்கம்போல் தோட்டத்துக்குச் சென்று பார்க்கும்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள், வாழை மரங்கள் முறிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து கோம்பைப்பட்டி பகுதியில் யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளை: மாஸ்டர் பிளான் முருகனிடம் காவல் துறை விசாரணை

Intro:திண்டுக்கல்.
பழனி அருகே பயிர்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் விவசாயிகல் அச்சம்.

Body:திண்டுக்கல். 12.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனி அருகே பயிர்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் விவசாயிகல் அச்சம்.

பழனியை அடுத்த ஆய்குடி அருகே கோம்பைபட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியாகும். இங்கு ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் கரும்பு வாழை, தென்னை, உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது அடிக்கடி நடந்து வருகிறது.

கடந்த சில வாரங்ஙகளாக யானைகள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அப்பகுதியில் யானை ஒன்று விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்வதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.

மூலக்கடை பகுதியை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் உள்ள தென்னை, கரும்பு, வாழை பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

நேற்று காலை வேலுச்சாமி வழக்கம்போல் தோட்டத்க்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பயிரிட்டிருந்த தென்னை மரம், வாழை மரங்கள் முறிந்த நிலையில் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் அந்த இடத்தில் யானையின் கால்தடம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

கோம்பைப்பட்டி பகுதியில் மீண்டும் யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே இந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:திண்டுக்கல். 12.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனி அருகே பயிர்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் விவசாயிகல் அச்சம்.

குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.