ETV Bharat / state

தென்ஆப்ரிக்காவில் உயிரிழந்த கணவர் - சடலத்தை மீட்டு தரக்கோரி மனைவி மனு!

author img

By

Published : May 27, 2023, 7:34 PM IST

தென்ஆப்ரிக்காவில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி முறையீட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி

திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லூ. இவரது மகன் முத்துப்பாண்டி (38). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன. இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள லிபேரியாவில் போர்வெல் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று (மே 26) காலை உடல்நிலை சரியில்லை என்று போன் செய்துள்ளனர். அதன் பிறகு முத்துப்பாண்டியன் மனைவி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போர்வெல் உரிமையாளருக்கு தொடர்ந்து போன் செய்துள்ளனர். அவர்கள் போனை எடுக்கவில்லை என்றும் மதியம் மூன்று மணிக்கு மேல் போனை எடுத்து முத்துப்பாண்டி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் எதனால் உயிரிழந்தார் என்று உறவினர்கள் கேட்ட பொழுது அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும் உடலை உடனடியாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள் என்று உறவினர்கள் கூறிய நிலையில் முத்துப்பாண்டியன் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முடியாது ஹைதராபாத்திற்கு முத்துப்பாண்டியன் உடலை கொண்டு வருகிறோம் அங்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டுக் கொண்டு வரக்கோரி, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, “எனது கணவர் போர்வெல் வாகன ஓட்டுநராக வேலை செய்கிறார். அவர் வேலைக்குச் சென்று 11 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை தினமும் எங்களிடம் இரண்டு, மூன்று முறையாவது வீடியோ கால் மூலம் பேசிவிடுவார்.

அதேபோல், கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் எங்களிடம் வீடியோ காலில் நன்றாக தான் பேசினார். அப்போது அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார். ஆனால், திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் உயிரிழந்துவிட்டதாக அவருடன் வேலை செய்பவர்கள் மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது.

பின்னர், தொடர்ந்து அவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தும், அவர்கள் எங்களது அழைப்பை எடுக்கவில்லை. அவருடைய சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இப்போ பிறந்த குழந்தையை கூட அவர் இன்னும் பார்க்கவில்லை. ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் எனது கணவரின் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உதவுங்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து முத்துப்பாண்டியில் சகோதரி கூறுகையில், “முத்துப்பாண்டி தினமும் எங்களுக்கு வீடியோ காலில் அழைப்பு விடுவார். குழந்தையை பார்த்துக்கொள்ளுமாரும், குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்குமாறும் தினமும் கூறுவார். நன்றாக பேசிக்கொண்டிருந்த எனது தம்பி திடீரென உயிரிழந்ததாக வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எங்களுக்கு இந்த அரசாங்கம் தான் உதவ வேண்டும், எனது தம்பியின் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உதவ வேண்டும். இது குறித்து விசாரித்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: Trichy Crime: குதிரை பந்தயத்தில் மோதல்? - திருச்சியில் இளைஞர் கொலை..

ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி

திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லூ. இவரது மகன் முத்துப்பாண்டி (38). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன. இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள லிபேரியாவில் போர்வெல் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று (மே 26) காலை உடல்நிலை சரியில்லை என்று போன் செய்துள்ளனர். அதன் பிறகு முத்துப்பாண்டியன் மனைவி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போர்வெல் உரிமையாளருக்கு தொடர்ந்து போன் செய்துள்ளனர். அவர்கள் போனை எடுக்கவில்லை என்றும் மதியம் மூன்று மணிக்கு மேல் போனை எடுத்து முத்துப்பாண்டி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் எதனால் உயிரிழந்தார் என்று உறவினர்கள் கேட்ட பொழுது அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும் உடலை உடனடியாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள் என்று உறவினர்கள் கூறிய நிலையில் முத்துப்பாண்டியன் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முடியாது ஹைதராபாத்திற்கு முத்துப்பாண்டியன் உடலை கொண்டு வருகிறோம் அங்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டுக் கொண்டு வரக்கோரி, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, “எனது கணவர் போர்வெல் வாகன ஓட்டுநராக வேலை செய்கிறார். அவர் வேலைக்குச் சென்று 11 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை தினமும் எங்களிடம் இரண்டு, மூன்று முறையாவது வீடியோ கால் மூலம் பேசிவிடுவார்.

அதேபோல், கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் எங்களிடம் வீடியோ காலில் நன்றாக தான் பேசினார். அப்போது அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார். ஆனால், திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் உயிரிழந்துவிட்டதாக அவருடன் வேலை செய்பவர்கள் மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது.

பின்னர், தொடர்ந்து அவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தும், அவர்கள் எங்களது அழைப்பை எடுக்கவில்லை. அவருடைய சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இப்போ பிறந்த குழந்தையை கூட அவர் இன்னும் பார்க்கவில்லை. ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் எனது கணவரின் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உதவுங்கள்” என தெரிவித்தார்.

தொடர்ந்து முத்துப்பாண்டியில் சகோதரி கூறுகையில், “முத்துப்பாண்டி தினமும் எங்களுக்கு வீடியோ காலில் அழைப்பு விடுவார். குழந்தையை பார்த்துக்கொள்ளுமாரும், குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்குமாறும் தினமும் கூறுவார். நன்றாக பேசிக்கொண்டிருந்த எனது தம்பி திடீரென உயிரிழந்ததாக வந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எங்களுக்கு இந்த அரசாங்கம் தான் உதவ வேண்டும், எனது தம்பியின் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உதவ வேண்டும். இது குறித்து விசாரித்து, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: Trichy Crime: குதிரை பந்தயத்தில் மோதல்? - திருச்சியில் இளைஞர் கொலை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.