ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவர் கைது - கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவர் கைது

திண்டுக்கல்லில் திருமணத்தை மீறிய உறவால் கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவர் கைது
கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூவர் கைது
author img

By

Published : Feb 12, 2022, 5:21 PM IST

திண்டுக்கல்: பழனி அருகே ஆர்.ஜி. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் - நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கிடையே, செல்வராஜின் மனைவி, தனது கணவரை காணவில்லை என பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், செல்வராஜ் இறந்து கிடந்த தகவல் கிடைத்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமான உடற்கூராய்வு அறிக்கையில் செல்வராஜ் கழுத்தை நெறித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜெகதாவின் செல்ஃபோன் எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மூலம் ஜெகதா கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜெகதாவிற்கும், பைனான்ஸ் தொழில் செய்து வந்த திண்டுக்கல் மாவட்டம் பித்தளைபட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

மேலும், செல்வராஜ் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால் ஜெகதா, அவரது தாய் ஓபுளாபுரத்தைச் சேர்ந்த ராஜம்மாள், பைனான்ஸியர் ஜெகதீஸ் ஆகியோர் சேர்ந்து செல்வராஜை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பழனி தாலுகா காவல் துறையினர் ஜெகதா, ராஜம்மாள், ஜெகதீஸ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு - குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியிடம் விசாரணை

திண்டுக்கல்: பழனி அருகே ஆர்.ஜி. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் - நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கிடையே, செல்வராஜின் மனைவி, தனது கணவரை காணவில்லை என பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், செல்வராஜ் இறந்து கிடந்த தகவல் கிடைத்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமான உடற்கூராய்வு அறிக்கையில் செல்வராஜ் கழுத்தை நெறித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜெகதாவின் செல்ஃபோன் எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மூலம் ஜெகதா கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜெகதாவிற்கும், பைனான்ஸ் தொழில் செய்து வந்த திண்டுக்கல் மாவட்டம் பித்தளைபட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

மேலும், செல்வராஜ் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால் ஜெகதா, அவரது தாய் ஓபுளாபுரத்தைச் சேர்ந்த ராஜம்மாள், பைனான்ஸியர் ஜெகதீஸ் ஆகியோர் சேர்ந்து செல்வராஜை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பழனி தாலுகா காவல் துறையினர் ஜெகதா, ராஜம்மாள், ஜெகதீஸ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு - குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.