திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் ஒருவர் இறந்துள்ளார். அவரது துக்க நிகழ்வானது நேற்று திண்டுக்கல்லில் உள்ள மயானத்தில் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் அதே பகுதியைச் சேர்ந்த பாலுச்சாமி, சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு திரும்பிய, அவர்கள் வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக இருவரும் கிணற்றில் சிக்கி, வெளி வர முடியாமல் போராடியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு, மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறைனர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:22 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற பெற்றோர் கைது!