ETV Bharat / state

தைப்பூசம்: 'பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்' - திண்டுக்கல் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன்

திண்டுக்கல்: பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டுமென மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

food for Pilgrims
food for Pilgrims
author img

By

Published : Feb 3, 2020, 1:11 PM IST

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை, சேலம், தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

அதன்படி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஆகியோர் அன்னதானம் வழங்குகின்றனர். இந்நிலையில், பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 10 நிமிடங்களில் அனுமதி வழங்கப்படும். அதன்பின் ஒட்டன்சத்திரம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் மோகனரங்கத்திடம் உணவுப் பாதுகாப்பு உரிமப் பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அன்னதானம் வழங்கும் இடம், நேரம், குப்பைகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

food for Pilgrims

அதேபோல் பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு, குடிநீர் ஆகியவை வழங்க வேண்டும். அன்னதானம் வழங்கும்போது நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. வாழை இலை, பாக்குமட்டை தட்டுகள், சில்வர் டம்ளர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி பெறாமல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இப்படிப் பேசினால் எப்படி நான் வேலை செய்ய முடியும்' - வருத்தப்பட்ட வசந்தகுமார் எம்.பி.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை, சேலம், தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

அதன்படி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஆகியோர் அன்னதானம் வழங்குகின்றனர். இந்நிலையில், பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெற www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 10 நிமிடங்களில் அனுமதி வழங்கப்படும். அதன்பின் ஒட்டன்சத்திரம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் மோகனரங்கத்திடம் உணவுப் பாதுகாப்பு உரிமப் பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அன்னதானம் வழங்கும் இடம், நேரம், குப்பைகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

food for Pilgrims

அதேபோல் பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு, குடிநீர் ஆகியவை வழங்க வேண்டும். அன்னதானம் வழங்கும்போது நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. வாழை இலை, பாக்குமட்டை தட்டுகள், சில்வர் டம்ளர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி பெறாமல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இப்படிப் பேசினால் எப்படி நான் வேலை செய்ய முடியும்' - வருத்தப்பட்ட வசந்தகுமார் எம்.பி.

Intro:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தகவல்.

Body:திண்டுக்கல் 03.02.2020
எம்.பூபதி செய்தியாளர்

ஒட்டன்சத்திரத்தில் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தகவல்

அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 8ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காரைக்குடி, மதுரை, தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் அன்னதானம் மற்றும் மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டுமென மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அன்னதானம் வழங்க அனுமதி பெற www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 10 நிமிடங்களில் அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர் ஒட்டன்சத்திரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மோகனரங்கம் அவர்களிடம் உணவு பாதுகாப்பு உரிம பதிவு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் அன்னதானம் வழங்கும் இடம், நேரம், குப்பைகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அதே போல் பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு, குடிநீர் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்கும் போது பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் இலைகள் பயன்படுத்த கூடாது. வாழை இலை, பாக்குமட்டை தட்டுகள், சில்வர் டம்ளர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு துறையிடம் முன் அனுமதி பெறாமல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.Conclusion:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தகவல்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.