திண்டுக்கல்: உக்ரைன்-ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில், உக்ரைனில் வசிக்கும் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை ஒன்றிய அரசு, மாநில அரசு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற கொடைக்கானலைச் சேர்ந்த மாணவி வீடு திரும்பியுள்ளார். இவரைக் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி வியாணி, "நான் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தங்கி ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தேன். கீவ்வில் போர் தொடங்கியதும் பதுங்கு குழியில் தங்கியிருந்தோம். 1 வாரத்திற்கும் மேலாக பதுங்கு குழியில் தான் இருந்தோம். எங்களை மீட்க உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் முறையாகப் பதில் அளிக்கவில்லை. நீங்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினர். இந்தியத் தூதரகமும் எங்களுக்கு உதவவில்லை.
ரயில் நிலையத்தில் 50,000 மாணவர்கள்