ETV Bharat / state

பழனி கோயிலில் பாலாலய பூஜையில் அமைச்சர்கள் பங்கேற்பு! - சேவூர் ராமசந்திரன்

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற பாலாலய பூஜையில், அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ministers participate in the Balalaya Puja at Palani Temple
Ministers participate in the Balalaya Puja at Palani Temple
author img

By

Published : Dec 2, 2019, 9:13 PM IST

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பாத விநாயகர் கோயில், மலை மீதுள்ள இடும்பன் கோயில், வள்ளி சுனை, மயில் வாகனங்கள் உள்ளிட்ட கோயில் கோபுரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றின் திருப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை கடந்த 30ஆம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

பாலாலய பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர்கள்

இன்று நடைபெற்ற யாக பூஜையில் புனித தீர்த்தங்களுடன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டது. பின்னர் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாலய நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ’தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதிமுக சந்திக்கும்' - ஓபிஎஸ் !

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பாத விநாயகர் கோயில், மலை மீதுள்ள இடும்பன் கோயில், வள்ளி சுனை, மயில் வாகனங்கள் உள்ளிட்ட கோயில் கோபுரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றின் திருப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை கடந்த 30ஆம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

பாலாலய பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர்கள்

இன்று நடைபெற்ற யாக பூஜையில் புனித தீர்த்தங்களுடன் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டது. பின்னர் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாலய நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ’தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதிமுக சந்திக்கும்' - ஓபிஎஸ் !

Intro:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜையில் இந்துசமய அறநிலையத்துறை அமைசாசர் சேவூர்.ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Body:திண்டுக்கல் 02.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜையில் இந்துசமய அறநிலையத்துறை அமைசாசர் சேவூர்.ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தபடும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து பத்துகோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பாதவிநாயகர் கோவில், மலைமீதுள்ள இடும்பன்கோவில்,வள்ளிசுனை, மயில்வாகனங்கள் உள்ளிட்ட கோவில் கோபுரங்கள் மற்றும் மண்டபங்கள் ஆகியவற்றின் திருப்பணிகள் துவங்க உள்ளன. திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை கடந்த 30ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் தொடர்ந்து இன்று நடைபெற்ற யாகபூஜையில் புனித தீர்த்தங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டன. கட்டிடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாலய நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, கோவில் இணைஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.Conclusion:திண்டுக்கல் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜையில் இந்துசமய அறநிலையத்துறை அமைசாசர் சேவூர்.ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.