ETV Bharat / state

2,868 விலையில்லா மிதிவண்டிகள்; அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கி வைப்பு - விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

திண்டுக்கல்: பத்து பள்ளிகளைச் சேர்ந்த  2 ஆயிரத்து 868 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

minister-dindukal-sreenivasan-press-meet-in-dindigul
minister Dindukal Sreenivasan press meet in dindigul
author img

By

Published : Feb 9, 2020, 8:29 AM IST

திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்து பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 868 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், இந்த விழாவில் மொத்தம் பத்து பள்ளிகளைச் சேர்ந்த 961 மாணவர்கள் மற்றும் 1907 மாணவிகள் என மொத்தம் 2,868 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.113 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 771 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது எனக் கூறினார்

திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்து பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 868 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், இந்த விழாவில் மொத்தம் பத்து பள்ளிகளைச் சேர்ந்த 961 மாணவர்கள் மற்றும் 1907 மாணவிகள் என மொத்தம் 2,868 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.113 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 771 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது எனக் கூறினார்

இதையும் படிங்க: கைக்குழந்தையின் முன் தாய் தூக்கு மாட்டி தற்கொலை

Intro:திண்டுக்கல் 8.02.2020

நம்ம ஊருக்கு தண்ணி வேணும், லைட் வேணும், ரோடு வேண்டும் இது மாதிரி எதுவும் கேள்வி இருந்தா கேளுங்க, அரசியல் கேள்வி என்கிட்ட கேட்க வேண்டாம் என்ற வனத்துறை அமைச்சர்.

Body:திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி தலைமையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பள்ளி மாணவ,
மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் மொத்தம் 10 பள்ளிகளைச் சேர்ந்த 961 மாணவர்கள் மற்றும் 1907 மாணவியர்கள் என 2,868 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.113 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 14,771 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது என கூறினார்

அதன் பின்னர் செய்தியாளர்கள் அரசியல் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன். அது பற்றிய விவரம் வருமாறு. குரூப் 2 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான கேள்விக்கு இதெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் பிரமாதமாக சொல்லிவிட்டார். இங்கு வேறு எதாவது பிரச்சனை இருக்கிறதா? சொல்லுங்க. இந்த விழாவில் ஒன்றும் குழப்பம் இல்லையே, சொல்லுப்பா யாராவது கேள்விகேளுங்க என்றார் அப்போது விஜய் வீட்டில் வருமானவரி சோதனை பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சீனிவாசன் ஏம்பா அதுக்கு நான் தான் கிடைச்சனா? என்றார். விடுங்க வேறு ஏதாவது கேளுங்கப்பா என்றார்.
இன்னொரு நிருபர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜககாரர் மாதிரி பேசிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் தண்ணீர் வேண்டும், ரோடு வேண்டும், லைட் வேண்டும் என்று கேட்டால் பதில் சொல்கிறேன். வேறு நம்ம ஊர் பிரச்சனை பற்றி கேளுங்க இல்லனா விடுங்க என்று கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.