ETV Bharat / state

கரோனா தொற்றை எதிர்க்கும் தைலம்... அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அசத்தல்...

author img

By

Published : Aug 21, 2022, 3:53 PM IST

யூகலிப்டஸ் மரங்களிலிருந்து உருவாக்கப்படும் தைலம் கரோனா தொற்று மற்றும் தோல் நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நிரூபித்து சாதனை படைத்துள்ளது.

உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி
உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள மரங்கள், செடி, கொடிகள் மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், யூகலிப்டஸ் மரங்களில் இருந்து உருவாக்கப்படும் தைலம் கரோனா தொற்று மற்றும் தோல் நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை நிரூபித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரங்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்த ஆராய்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறையினர் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட வகைகளான யூகலிப்டஸ் மரங்கள் கண்டறியப்பட்டன.

உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி

இவற்றிலிருந்து தைலங்களை தாயாரித்து அதிலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் யூகலிப்டஸ் தைலத்தை வைத்து ஆவி பிடிக்கும் பொழுது உடலில் கரோனா தொற்று இருப்பின் வீரியம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சில யூகலிப்டஸ் தைல வகைகளை ஒன்றாக சேர்த்து பயன்படுத்தும் போது உடலில் ஏற்படக்கூடிய பூஞ்சை நோய்கள் குணமடைகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமானதால் பேட்டர்ன் ரைட்ஸ் உரிமைகளுக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுபோன்ற ஆராய்ச்சிகள் இன்னும் தொடரும் என்று உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் தகுதி தேர்வை அறிமுகப்படுத்தியது ஆசிரியர் தேர்வு வாரியம்

திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள மரங்கள், செடி, கொடிகள் மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், யூகலிப்டஸ் மரங்களில் இருந்து உருவாக்கப்படும் தைலம் கரோனா தொற்று மற்றும் தோல் நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை நிரூபித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரங்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்த ஆராய்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறையினர் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட வகைகளான யூகலிப்டஸ் மரங்கள் கண்டறியப்பட்டன.

உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி

இவற்றிலிருந்து தைலங்களை தாயாரித்து அதிலும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் யூகலிப்டஸ் தைலத்தை வைத்து ஆவி பிடிக்கும் பொழுது உடலில் கரோனா தொற்று இருப்பின் வீரியம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சில யூகலிப்டஸ் தைல வகைகளை ஒன்றாக சேர்த்து பயன்படுத்தும் போது உடலில் ஏற்படக்கூடிய பூஞ்சை நோய்கள் குணமடைகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமானதால் பேட்டர்ன் ரைட்ஸ் உரிமைகளுக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுபோன்ற ஆராய்ச்சிகள் இன்னும் தொடரும் என்று உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியர் உஷா ராஜா நந்தினி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் தகுதி தேர்வை அறிமுகப்படுத்தியது ஆசிரியர் தேர்வு வாரியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.