ETV Bharat / state

யானை அட்டகாசத்தால் மின்வேலி அமைக்க மக்கள் கோரிக்கை!

author img

By

Published : Oct 20, 2019, 3:27 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் மலை கிராமங்களில் யானைகள் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்து வருவதால், அப்பகுதியில் மின்வேலி அமைக்கக் கோரி விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

kodaikanal

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மலைக்கிராமங்களில் யானைகளின் படையெடுப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாகவே யானைக் கூட்டம் தாண்டிக்குடி, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு, புலியூர், ஆகிய கிராமப் பகுதிகளில் நள்ளிரவில் நுழைந்து விவசாயிகள் அங்கு பயிரிட்ட அவரை, செள செள போன்ற காய்கறிகளை சேதப்படுத்தியுள்ளன.

இதனைக் கண்ட விவசாயிகள் யானைகளை விரட்ட முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடரும் யானை அட்டகாசத்தால் விவசாயிகள் இரவு தூங்க முடியாமல் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதனால் யானைகள் சேதப்படுத்திச் செல்லும் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள், யானைகள் கூட்டம் வராமல் இருக்க மின்வேலிகள் அமைக்க வேண்டுமென கிராம பொது மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலை கிராம்

மேலும் படிக்க: 3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை

மேலும் பார்க்க: யானை-மனித மோதலைத் தடுக்கும் கருவி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மலைக்கிராமங்களில் யானைகளின் படையெடுப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாகவே யானைக் கூட்டம் தாண்டிக்குடி, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு, புலியூர், ஆகிய கிராமப் பகுதிகளில் நள்ளிரவில் நுழைந்து விவசாயிகள் அங்கு பயிரிட்ட அவரை, செள செள போன்ற காய்கறிகளை சேதப்படுத்தியுள்ளன.

இதனைக் கண்ட விவசாயிகள் யானைகளை விரட்ட முடியாததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடரும் யானை அட்டகாசத்தால் விவசாயிகள் இரவு தூங்க முடியாமல் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதனால் யானைகள் சேதப்படுத்திச் செல்லும் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள், யானைகள் கூட்டம் வராமல் இருக்க மின்வேலிகள் அமைக்க வேண்டுமென கிராம பொது மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலை கிராம்

மேலும் படிக்க: 3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை

மேலும் பார்க்க: யானை-மனித மோதலைத் தடுக்கும் கருவி!

Intro:திண்டுக்கல் 18.10.19

கொடைக்கானல் மலை கிராமங்களில் யானை கூட்டங்கள் அட்டகாசம். மின் வேலிஅமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.

 

Body:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மலை கிராமங்களில் யானைகளின் படையெடுப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே யானை கூட்டங்கள் தாண்டிகுடி, பேத்துப்பாறை ,பாரதி அண்ணாநகர் , அஞ்சுவீடு , புலியூர் , ஆகிய கிராம பகுதிக்குள் நுழைவதும் விவசாய பயிர்களை நள்ளிரவு விளை நிலங்களில் புகுந்து யானை கூட்டம்  அங்கு பயிரிடப்பட்ட அவரை, சொள சொள போன்ற காய்கறிகளை சேதப்படுத்தியும் வந்துள்ளது. யானையை விரட்ட முயன்ற விவசாயிகளையும் யானைகள் விரட்டியதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தொடரும் யானை அட்டகாசத்தால் விவசாயிகள் இரவு தூங்க முடியாமல் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனால் யானைகள் சேதப்படுத்தி செல்லும் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் கூட்டம் வராமல் இருக்க மின்வேலிகள் அமைக்க வேண்டுமென கிராம பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.