ETV Bharat / state

கீச்சொலிகளின் கானகமாகும் மலைகளின் இளவரசி!

author img

By

Published : Aug 23, 2021, 7:04 PM IST

மேகங்கள் முத்தமிட தக்காணபீடபூமியின் மேற்கு பகுதி முழுவதும் நீண்டு கிடக்கும் மலைத்தொடரில், 22 சதுர கிலோ மீட்டர் வரை பரவி இருக்கிறது கொடைக்கானல் மலை. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இந்த பிரபலமான கோடை வாசஸ்தலம் பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தற்போது புள்ளினங்காள்களின் கானகமாகியுள்ளது.

மலைகளின் இளவரசி
மலைகளின் இளவரசி

திண்டுக்கல்: கூடடைந்து கிடக்கும் குஞ்சுகளைக் கொஞ்சியபடி உணவூட்டும் சிவப்பு மீசை சின்னான், புல் தரையில் பூச்சிகளைக் இனம் கண்டு வேட்டையாடும் கொண்டலாத்தி, காற்றில் மிதந்தபடி தலைகீழாகத் தொங்கும் தேனுறுஞ்சும் சிட்டு, சுற்றுச்சுவர் கச்சேரியின் இடையே திடீரென பறந்து வேடிக்கை காட்டும் அடைக்கலங்குருவிகள், மனித பயமற்று எளிதில் காணக்கிடைக்கும் மலைச்சிட்டுக் குருவி என கொடைக்கானல்வாசிகளின் தினப் பொழுதுகளை ரசனைக்குள்ளாக்கி வருகிறன புள்ளினங்காள்.

கன்னியாக்குமரி - சென்னை ரயில் தடத்தில், மதுரை திண்டுக்கல் வழிப்பாதையில் உள்ள கொடைரோட்டிலிருந்து 80 கி.மீ., தொலைவில் இருக்கிறது கொடைக்கானல் மலை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை, தென்தமிழ்நாட்டின் சிறந்த கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி காடுகளைக் கொண்டுள்ளது இந்த மலையின் தனிச் சிறப்புகளில் ஒன்று.

சங்க காலத்தில் கோடை மலை என அழைக்கப்பட்ட இந்த மலையை, 1821ஆம் ஆண்டு நில ஆய்வு செய்த லெப்டினன்ட் பி.எஸ். வார்டு என்பவர் ஆங்கிலேயர்கள் வாழ்வதற்கான ஆக சிறந்த இடமாக இம்மலையை அறிவித்தார் என காலனியாதிக்க இந்திய வரலாறு கூறுகின்றன. இருந்தபோதிலும் கூன்பாண்டியன் காலத்து கோயில் ஒன்றைத் தன்னுள் கொண்டு, தன் வரலாற்று பெருமையை உலகறியச் செய்கிறது பளியர்களின் இந்த ஆதி பூமி.

அதிகரித்திருக்கும் வன அடர்த்தி

ஆண்டு முழுவதும் கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறது இந்த மலை. பளியர்களின் பூமியாகவும், பின்னர் ஆங்கிலேயர்களின் வசிப்பிடமாகவும் இருந்த வரையில் இயற்கை வனப்பை இழக்காக மலைகளின் இளவரசி, அதன் பின்பு ஏற்பட்ட சாலை வசதிகளின் பெருக்கத்தால் பிரமலமான சுற்றுலாத் தலமாக மாறியது. இதனால் அதிகரித்த மக்கள் நடமாட்டம், வாகனப்புகை அதிகரிப்பு ஆகிய மெல்ல தன் வனப்பை இழந்து வந்தது.


உலகம் முழுவதும் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வரும் பெருந்தொற்று ஊரடங்கு பலரின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. சிலருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருந்து வரும் ஊரடங்கு, கொடைக்கானலுக்கு தன் பழைய வனப்பை மீட்டு தர உதவி உள்ளது.

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக, 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. சமவெளிப்பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் சுற்றுலா தலமான கொடைக்கானல் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அமைதியின் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளாக அடர்வனங்களுக்குள் பதுங்கி வாழ்ந்த பறவையினங்கள் இப்போது மெல்ல வெளியே தலைகாட்டத் தொடங்கியுள்ளன.

"பல்லுயிர்களின் தாயகமான கொடைக்கானலில், தற்போது அரியவகை பறவைகளை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இயற்கை மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளதை இந்தநிகழ்வு காட்டுகிறது. இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி" என்கிறார் உள்ளூர்வாசியான அப்பாஸ்.

சாலை வசதி பெருக்கம், சுற்றுலா பெருக்கம் தந்த பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் இயற்கை வளம் இழந்து வந்ததை நாம் யாரும் உணரவே இல்லை. அதை நமக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது கரோனா பெருந்தொற்று ஊரடங்கு.

வருடத்திற்கொருமுறை ஊரடங்கு

விதைகளின் பரவலில் பறவைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. மக்கள் நெரிசல், வான ஓசைகள் இல்லாமல் இருந்த ஊரடங்கு காலத்தில் மனித அச்சமின்றி பறவைகள் பல்கிப் பெருகியுள்ளன. இதனால், கொடைக்கானலில் வழக்கத்தை விட 10 விழுக்காடு காட்டின் அடர்ந்தி கூடியிருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

"கரோனா பரவல் காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக இயற்கை மீண்டும் தன்னை உருவாக்கி கொண்டு வருகிறது. கொடைக்கானலில் ஊரடங்கு காரணமாக பறவை இனங்கள் பெருகி இயற்கையின் பரவலும் அதிமாகியுள்ளது. இது நமக்கு உணர்த்துவது ஒன்றுதான் உணர்த்துகிறது. இங்குள்ள பறவைகள், இயற்கை வளங்களை காப்பாற்ற இனிவரும் காலங்களில் ஒருமாத காலம் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டாலும், அடுத்த தலைமுறைகளுக்காக இயற்கை வளத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசும், சம்ந்தப்பட்ட துறை அலுவலர்களும் வருடம் தோறும் ஊரடங்கை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் இயற்கை ஆர்வலர் வீரா.

கடல் வளத்தை பாதுகாக்க வருடத்திற்கு ஒரு முறை மீன்பிடித்தடைக் காலத்தை அமல்படுத்தப்படுவது போல, மலைவளத்தை பாதுகாக்கவும் ஒரு மாத காலம் சுற்றுலாவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

ஏனெனில், இயற்கையை நாம் மூதாதையர்களிடமிருந்து இனாமாக பெறவில்லை, எதிர்கால சந்ததிகளிடமிருந்து கடனாக பெற்றிருக்கிறோம்.

இதையும் படிங்க: முருங்கை மலர்த் தேன் உற்பத்தி: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழிகாட்டும் நபர்!

திண்டுக்கல்: கூடடைந்து கிடக்கும் குஞ்சுகளைக் கொஞ்சியபடி உணவூட்டும் சிவப்பு மீசை சின்னான், புல் தரையில் பூச்சிகளைக் இனம் கண்டு வேட்டையாடும் கொண்டலாத்தி, காற்றில் மிதந்தபடி தலைகீழாகத் தொங்கும் தேனுறுஞ்சும் சிட்டு, சுற்றுச்சுவர் கச்சேரியின் இடையே திடீரென பறந்து வேடிக்கை காட்டும் அடைக்கலங்குருவிகள், மனித பயமற்று எளிதில் காணக்கிடைக்கும் மலைச்சிட்டுக் குருவி என கொடைக்கானல்வாசிகளின் தினப் பொழுதுகளை ரசனைக்குள்ளாக்கி வருகிறன புள்ளினங்காள்.

கன்னியாக்குமரி - சென்னை ரயில் தடத்தில், மதுரை திண்டுக்கல் வழிப்பாதையில் உள்ள கொடைரோட்டிலிருந்து 80 கி.மீ., தொலைவில் இருக்கிறது கொடைக்கானல் மலை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை, தென்தமிழ்நாட்டின் சிறந்த கோடை வாசஸ்தலமாக விளங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி காடுகளைக் கொண்டுள்ளது இந்த மலையின் தனிச் சிறப்புகளில் ஒன்று.

சங்க காலத்தில் கோடை மலை என அழைக்கப்பட்ட இந்த மலையை, 1821ஆம் ஆண்டு நில ஆய்வு செய்த லெப்டினன்ட் பி.எஸ். வார்டு என்பவர் ஆங்கிலேயர்கள் வாழ்வதற்கான ஆக சிறந்த இடமாக இம்மலையை அறிவித்தார் என காலனியாதிக்க இந்திய வரலாறு கூறுகின்றன. இருந்தபோதிலும் கூன்பாண்டியன் காலத்து கோயில் ஒன்றைத் தன்னுள் கொண்டு, தன் வரலாற்று பெருமையை உலகறியச் செய்கிறது பளியர்களின் இந்த ஆதி பூமி.

அதிகரித்திருக்கும் வன அடர்த்தி

ஆண்டு முழுவதும் கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறது இந்த மலை. பளியர்களின் பூமியாகவும், பின்னர் ஆங்கிலேயர்களின் வசிப்பிடமாகவும் இருந்த வரையில் இயற்கை வனப்பை இழக்காக மலைகளின் இளவரசி, அதன் பின்பு ஏற்பட்ட சாலை வசதிகளின் பெருக்கத்தால் பிரமலமான சுற்றுலாத் தலமாக மாறியது. இதனால் அதிகரித்த மக்கள் நடமாட்டம், வாகனப்புகை அதிகரிப்பு ஆகிய மெல்ல தன் வனப்பை இழந்து வந்தது.


உலகம் முழுவதும் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வரும் பெருந்தொற்று ஊரடங்கு பலரின் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. சிலருக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருந்து வரும் ஊரடங்கு, கொடைக்கானலுக்கு தன் பழைய வனப்பை மீட்டு தர உதவி உள்ளது.

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக, 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. சமவெளிப்பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் சுற்றுலா தலமான கொடைக்கானல் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த அமைதியின் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளாக அடர்வனங்களுக்குள் பதுங்கி வாழ்ந்த பறவையினங்கள் இப்போது மெல்ல வெளியே தலைகாட்டத் தொடங்கியுள்ளன.

"பல்லுயிர்களின் தாயகமான கொடைக்கானலில், தற்போது அரியவகை பறவைகளை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இயற்கை மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளதை இந்தநிகழ்வு காட்டுகிறது. இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி" என்கிறார் உள்ளூர்வாசியான அப்பாஸ்.

சாலை வசதி பெருக்கம், சுற்றுலா பெருக்கம் தந்த பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் இயற்கை வளம் இழந்து வந்ததை நாம் யாரும் உணரவே இல்லை. அதை நமக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது கரோனா பெருந்தொற்று ஊரடங்கு.

வருடத்திற்கொருமுறை ஊரடங்கு

விதைகளின் பரவலில் பறவைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. மக்கள் நெரிசல், வான ஓசைகள் இல்லாமல் இருந்த ஊரடங்கு காலத்தில் மனித அச்சமின்றி பறவைகள் பல்கிப் பெருகியுள்ளன. இதனால், கொடைக்கானலில் வழக்கத்தை விட 10 விழுக்காடு காட்டின் அடர்ந்தி கூடியிருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

"கரோனா பரவல் காரணமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக இயற்கை மீண்டும் தன்னை உருவாக்கி கொண்டு வருகிறது. கொடைக்கானலில் ஊரடங்கு காரணமாக பறவை இனங்கள் பெருகி இயற்கையின் பரவலும் அதிமாகியுள்ளது. இது நமக்கு உணர்த்துவது ஒன்றுதான் உணர்த்துகிறது. இங்குள்ள பறவைகள், இயற்கை வளங்களை காப்பாற்ற இனிவரும் காலங்களில் ஒருமாத காலம் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டாலும், அடுத்த தலைமுறைகளுக்காக இயற்கை வளத்தை பாதுகாத்துக் கொடுக்க அரசும், சம்ந்தப்பட்ட துறை அலுவலர்களும் வருடம் தோறும் ஊரடங்கை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் இயற்கை ஆர்வலர் வீரா.

கடல் வளத்தை பாதுகாக்க வருடத்திற்கு ஒரு முறை மீன்பிடித்தடைக் காலத்தை அமல்படுத்தப்படுவது போல, மலைவளத்தை பாதுகாக்கவும் ஒரு மாத காலம் சுற்றுலாவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

ஏனெனில், இயற்கையை நாம் மூதாதையர்களிடமிருந்து இனாமாக பெறவில்லை, எதிர்கால சந்ததிகளிடமிருந்து கடனாக பெற்றிருக்கிறோம்.

இதையும் படிங்க: முருங்கை மலர்த் தேன் உற்பத்தி: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழிகாட்டும் நபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.