ETV Bharat / state

திண்டுக்கல் காவல் துறை, நீதித் துறையைக் கண்டித்து டிச. 11இல் ஆர்ப்பாட்டம் - பாலபாரதி

author img

By

Published : Dec 9, 2021, 9:11 PM IST

திண்டுக்கல்லில் மாவட்ட காவல் துறை, நீதித் துறையைக் கண்டித்து வரும் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாலபாரதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

திண்டுக்கல்: இது குறித்து பாலபாரதி இன்று (டிசம்பர் 9) செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டுவரும் சுரபி கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக, அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போக்சோ சட்டத்தில் தேடப்பட்டுவந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு 11 நாள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவருக்குப் பிணை அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் பிணை அளிக்கப்பட்டதால், அகில இந்திய மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகாத சொற்களால் பேசிய வழக்கறிஞர்

அப்போது தெய்வேந்திரன், கண்டன உரை பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கீடு செய்து கேள்விகேட்டதும், தகாத சொற்களால் பேசியதால் கோபமடைந்த மாதர் சங்கத்தினர் வழக்கறிஞரைத் துரத்தியுள்ளனர். தாடிகொம்பு காவல் நிலையத்தில் மாதர் சங்கத்தின் மீது வழக்கறிஞர் தெய்வேந்திரன் பிணையில் வரமுடியாத அளவிற்கு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாலபாரதி பேட்டி

அந்த வழக்கறிஞர் தெய்வேந்திரன் மீது வடமதுரை காவல் நிலையத்தில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. மேலும் வடமதுரையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்.

அந்தக் கொலையின் எதிரிகளுக்கும் அவர்தான் வாதாடியுள்ளார். எனவே குழந்தைகளுக்கு எதிராக வாதாடும் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவசர அவசரமாக காவல் துறை வழக்குத் தொடுத்துள்ளது.

இதில் வழக்கறிஞர்கள் யாரும் போராடவில்லை. திண்டுக்கல் பார் கவுன்சில் ஜனநாயக முறையில் நடந்துகொண்டிருக்கிறது. பாஜகவின் வழக்கறிஞர்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் எஸ்பியே நேரடியாகக் கலந்துகொண்டு சமாதானப்படுத்துகிறார். அதற்கு என்ன அவசியம் வந்தது. அந்தச் செயல் எங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

பெண்கள் நீதிமன்றத்தில் போராட உரிமை இல்லை

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுரபி கேட்டரிங் கல்லூரி தாளாளருக்குப் பிணை கிடைத்தால், பெண்கள் நீதிமன்றத்தில் போராட உரிமை இல்லையா? அதை விடுத்து எங்கள் மீது பிணையில் வரமுடியாத அளவிற்கு வழக்குப் பதிவுசெய்து காவல் துறை சித்திரிக்கிறது. இது யாரைப் பாதுகாப்பதற்காக என்பது தெரியவில்லை.

சமூக விரோத கும்பல் குற்றவாளிக்குச் சாதகமாக காவல் துறை கண்காணிப்பாளர் செயல்படுகிறார் என்ற முடிவுக்குப் போக வேண்டியுள்ளது. இதை அனுமதித்தால் நமது வீட்டுக் குழந்தைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது. தமிழ்நாடு அரசு சட்டரீதியான மேல்முறையீட்டுக்குச் சென்று உடனே ரத்துசெய்ய வேண்டும்.

சிபிசிஐடி விசாரணை மூலமாக அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்ற வேண்டும். குற்றவாளிகள் வெளியிலிருந்தால் நாங்கள் எப்படி காவல் துறையால் அச்சுறுத்தப்படுகிறோம். அடுத்து சமூக விரோதிகள் மூலம் எங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் எங்களுக்கு இந்நிலை என்றால் ஏழை, எளிய குடும்பம் என்ன செய்வார்கள் ஆகவே பிணையை ரத்துசெய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் அதிமுக அரசு நியமித்த அரசு பொது வழக்கறிஞர்களை தற்போதுள்ள அரசு மாற்றம் செய்துள்ளது. ஆனால் திண்டுக்கல்லில் அந்த மாற்றம் செய்யப்படவில்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்" என்றார்.

மேலும் திண்டுக்கல்லில் மாவட்ட காவல் துறை, நீதித் துறையைக் கண்டித்து 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் பாலபாரதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்லவை எடுத்துக்கொள்ளப்படும் - அன்பில் மகேஷ்

திண்டுக்கல்: இது குறித்து பாலபாரதி இன்று (டிசம்பர் 9) செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டுவரும் சுரபி கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக, அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போக்சோ சட்டத்தில் தேடப்பட்டுவந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு 11 நாள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவருக்குப் பிணை அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் பிணை அளிக்கப்பட்டதால், அகில இந்திய மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகாத சொற்களால் பேசிய வழக்கறிஞர்

அப்போது தெய்வேந்திரன், கண்டன உரை பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கீடு செய்து கேள்விகேட்டதும், தகாத சொற்களால் பேசியதால் கோபமடைந்த மாதர் சங்கத்தினர் வழக்கறிஞரைத் துரத்தியுள்ளனர். தாடிகொம்பு காவல் நிலையத்தில் மாதர் சங்கத்தின் மீது வழக்கறிஞர் தெய்வேந்திரன் பிணையில் வரமுடியாத அளவிற்கு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாலபாரதி பேட்டி

அந்த வழக்கறிஞர் தெய்வேந்திரன் மீது வடமதுரை காவல் நிலையத்தில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளது. மேலும் வடமதுரையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்.

அந்தக் கொலையின் எதிரிகளுக்கும் அவர்தான் வாதாடியுள்ளார். எனவே குழந்தைகளுக்கு எதிராக வாதாடும் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவசர அவசரமாக காவல் துறை வழக்குத் தொடுத்துள்ளது.

இதில் வழக்கறிஞர்கள் யாரும் போராடவில்லை. திண்டுக்கல் பார் கவுன்சில் ஜனநாயக முறையில் நடந்துகொண்டிருக்கிறது. பாஜகவின் வழக்கறிஞர்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் எஸ்பியே நேரடியாகக் கலந்துகொண்டு சமாதானப்படுத்துகிறார். அதற்கு என்ன அவசியம் வந்தது. அந்தச் செயல் எங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

பெண்கள் நீதிமன்றத்தில் போராட உரிமை இல்லை

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுரபி கேட்டரிங் கல்லூரி தாளாளருக்குப் பிணை கிடைத்தால், பெண்கள் நீதிமன்றத்தில் போராட உரிமை இல்லையா? அதை விடுத்து எங்கள் மீது பிணையில் வரமுடியாத அளவிற்கு வழக்குப் பதிவுசெய்து காவல் துறை சித்திரிக்கிறது. இது யாரைப் பாதுகாப்பதற்காக என்பது தெரியவில்லை.

சமூக விரோத கும்பல் குற்றவாளிக்குச் சாதகமாக காவல் துறை கண்காணிப்பாளர் செயல்படுகிறார் என்ற முடிவுக்குப் போக வேண்டியுள்ளது. இதை அனுமதித்தால் நமது வீட்டுக் குழந்தைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது. தமிழ்நாடு அரசு சட்டரீதியான மேல்முறையீட்டுக்குச் சென்று உடனே ரத்துசெய்ய வேண்டும்.

சிபிசிஐடி விசாரணை மூலமாக அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்ற வேண்டும். குற்றவாளிகள் வெளியிலிருந்தால் நாங்கள் எப்படி காவல் துறையால் அச்சுறுத்தப்படுகிறோம். அடுத்து சமூக விரோதிகள் மூலம் எங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் எங்களுக்கு இந்நிலை என்றால் ஏழை, எளிய குடும்பம் என்ன செய்வார்கள் ஆகவே பிணையை ரத்துசெய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் அதிமுக அரசு நியமித்த அரசு பொது வழக்கறிஞர்களை தற்போதுள்ள அரசு மாற்றம் செய்துள்ளது. ஆனால் திண்டுக்கல்லில் அந்த மாற்றம் செய்யப்படவில்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்" என்றார்.

மேலும் திண்டுக்கல்லில் மாவட்ட காவல் துறை, நீதித் துறையைக் கண்டித்து 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் பாலபாரதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்லவை எடுத்துக்கொள்ளப்படும் - அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.