ETV Bharat / state

காட்டுயானையை வெடி வைத்து துரத்தும் பணிகள் தீவிரம்! - Wildlife in Dindigul Agricultural Land

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு காட்டு யானைகளை வெடி வைத்து துரத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

காட்டுயானையை வெடி வைத்து துரத்தும் பணி தீவிரம்
காட்டுயானையை வெடி வைத்து துரத்தும் பணி தீவிரம்
author img

By

Published : Jan 26, 2020, 11:41 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்கோட்டை மலைப் பகுதி அருகே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விளைந்திருக்கும் பயிர்களை உண்பதற்காக இரண்டு காட்டுயானைகள் வந்துள்ளன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வித்தியா தலைமையிலான வன ஊழியர்கள் 20 பேர் இரண்டு காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர்.

காட்டுயானையை வெடி வைத்து துரத்தும் பணிகள் தீவிரம்

ஆனால், காட்டு யானைகள் லக்கையன்கோட்டை விவசாயப் பகுதியை விட்டுச் செல்லாத காரணத்தால் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு வெடி வைத்தும் புகை மூட்டியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் யானைகள் அங்கிருந்து நகராததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்கோட்டை மலைப் பகுதி அருகே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விளைந்திருக்கும் பயிர்களை உண்பதற்காக இரண்டு காட்டுயானைகள் வந்துள்ளன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வித்தியா தலைமையிலான வன ஊழியர்கள் 20 பேர் இரண்டு காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர்.

காட்டுயானையை வெடி வைத்து துரத்தும் பணிகள் தீவிரம்

ஆனால், காட்டு யானைகள் லக்கையன்கோட்டை விவசாயப் பகுதியை விட்டுச் செல்லாத காரணத்தால் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு வெடி வைத்தும் புகை மூட்டியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் யானைகள் அங்கிருந்து நகராததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்

Intro:திண்டுக்கல் 25.01.20
ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு காட்டுயானைகளை வெடி வைத்து துரத்தும் பணி தீவிரம்Body:திண்டுக்கல் 25.01.20
எம்.பூபதி செய்தியாளர்.

ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு காட்டுயானைகளை வெடி வைத்து துரத்தும் பணி தீவிரம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கையன்கோட்டை மலைப் பகுதி அருகே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதிக்கு இன்று காலை இரண்டு காட்டுயானைகள் வந்துள்ளது இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் வித்தியா தலைமையிலான வன ஊழியர்கள் 20பேர் இன்று காலை முதல் காட்டு யானைகள் இரண்டையும் விரட்ட முயற்சி செய்து வந்தனர். ஆனால் காட்டு யானைகள் லக்கையன்கோட்டை விவசாய பகுதியை விட்டு செல்லாத காரணத்தால் இன்று மாலை முதல் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 2 காட்டு யானைகளை வெடி வைத்து புகைமூட்டம் மூட்டியும் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர் இன்று இரவுக்குள் இங்கிருந்து இரண்டு காட்டு யானைகளையும் மலைப் பகுதிகளுக்கு விரட்ட தொடர்ந்து வெடிவைத்து பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். காட்டு யானை விவசாய பகுதியில் முகாமிட்டு உள்ளதால் லக்கையன்கோட்டை பகுதி விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் ‌.காலை முதல் 14 மணி நேரத்திற்கு மேலாக யானைகளை விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு காட்டுயானைகளை வெடி வைத்து துரத்தும் பணி தீவிரம்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.