ETV Bharat / state

திண்டுக்கல்லில் கோர விபத்து- கர்ப்பிணி காவலர் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 12, 2022, 10:39 PM IST

திண்டுக்கல் - வத்தலக்குண்டு பைபாஸ் அருகே நின்றிருந்த லாரியில் கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணியான காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

திண்டுக்கல்லில் கோர விபத்து- கர்ப்பிணி காவலர் பலி!
திண்டுக்கல்லில் கோர விபத்து- கர்ப்பிணி காவலர் பலி!

திண்டுக்கல்:முசிறி அருகே தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் முசிறியில் காவலராகப் பணி புரிகிறார். இவரது மனைவி திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள வக்கம்பட்டியைச் சேர்ந்த சுகந்தி (27). இவரும் திருச்சி காட்டுப்புத்தூரில் காவலராகப் பணிபுரிந்தவர்.

காவலர்களான கணவன் - மனைவி இருவரும் வக்கம்பட்டியில் உள்ள சுகந்தியின் அம்மா வீட்டிற்குத் திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளனர். காரினை சுரேஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் திண்டுக்கல் - வத்தலக்குண்டு பைபாஸ் அருகே உள்ள குட்டியபட்டி அருகே இவர்களது கார் வந்தபோது, அந்த சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் காரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கியதில் முன்புறம் அமர்ந்திருந்த சுகந்தி, சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சுகந்தி 9 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் சதீஷ் குமாரைப் படுகாயங்களுடன் மீட்டு அருகிலிருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் சுகந்தியின் வயிற்றிலிருந்த 9 மாத குழந்தையைப் பரிசோதித்துவிட்டு குழந்தையும் இறந்துவிட்டது எனத் தெரிவித்தனர். கணவர் சதீஷ்குமார் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். தகவலறிந்த மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த சோகம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Video: 'உனக்கு ஆயுசு கெட்டி ராஜா' - தண்டவாளத்தில் நூலிழையில் உயிர்ப்பிழைத்த சாது!

திண்டுக்கல்:முசிறி அருகே தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் முசிறியில் காவலராகப் பணி புரிகிறார். இவரது மனைவி திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள வக்கம்பட்டியைச் சேர்ந்த சுகந்தி (27). இவரும் திருச்சி காட்டுப்புத்தூரில் காவலராகப் பணிபுரிந்தவர்.

காவலர்களான கணவன் - மனைவி இருவரும் வக்கம்பட்டியில் உள்ள சுகந்தியின் அம்மா வீட்டிற்குத் திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளனர். காரினை சுரேஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் திண்டுக்கல் - வத்தலக்குண்டு பைபாஸ் அருகே உள்ள குட்டியபட்டி அருகே இவர்களது கார் வந்தபோது, அந்த சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் காரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கியதில் முன்புறம் அமர்ந்திருந்த சுகந்தி, சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சுகந்தி 9 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் சதீஷ் குமாரைப் படுகாயங்களுடன் மீட்டு அருகிலிருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் சுகந்தியின் வயிற்றிலிருந்த 9 மாத குழந்தையைப் பரிசோதித்துவிட்டு குழந்தையும் இறந்துவிட்டது எனத் தெரிவித்தனர். கணவர் சதீஷ்குமார் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். தகவலறிந்த மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் பொதுமக்களும் மிகுந்த சோகம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Video: 'உனக்கு ஆயுசு கெட்டி ராஜா' - தண்டவாளத்தில் நூலிழையில் உயிர்ப்பிழைத்த சாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.