ETV Bharat / state

திண்டுக்கல் ரவுடி கொலை வழக்கில் ஆறு பேர் கைது!

author img

By

Published : May 11, 2020, 8:06 PM IST

திண்டுக்கல்: ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது!
திண்டுக்கல் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது!

திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் என்ற சுள்ளான் ரமேஷ் (24). இவர் மீது திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் ஏழு நபர்கள் சுள்ளான் ரமேஷ் மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தி, வெட்டிக் கொலை செய்து தப்பி ஒடியுள்ளனர். இதனையடுத்து ரமேஷின் செல்போன் பயன்பாட்டை வைத்து ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், ரமேஷின் நண்பர் தவமணிக்கும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த டைசன் வினோவின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு சுள்ளான் ரமேஷ் உதவியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டைசன் வினோ கடந்த 8ஆம் தேதி இரவு அவரது அண்ணன் ஜான்சன் வினோ, நண்பர்கள் செல்வராஜ், வினோத்குமார், அழகர், மாயக்கண்ணன், வினோத் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து சுள்ளான் ரமேஷை தாக்கி கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் ரவுடி கொலை வழக்கில் ஆறு பேர் கைது

இதனையடுத்து பிடிபட்ட ஆறு பேரையும் கைது செய்த தாலுகா காவல் துறையினர், தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க...14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: 4 பேர் மீது பாய்ந்த போக்சோ

திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் என்ற சுள்ளான் ரமேஷ் (24). இவர் மீது திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் ஏழு நபர்கள் சுள்ளான் ரமேஷ் மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தி, வெட்டிக் கொலை செய்து தப்பி ஒடியுள்ளனர். இதனையடுத்து ரமேஷின் செல்போன் பயன்பாட்டை வைத்து ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், ரமேஷின் நண்பர் தவமணிக்கும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த டைசன் வினோவின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதற்கு சுள்ளான் ரமேஷ் உதவியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டைசன் வினோ கடந்த 8ஆம் தேதி இரவு அவரது அண்ணன் ஜான்சன் வினோ, நண்பர்கள் செல்வராஜ், வினோத்குமார், அழகர், மாயக்கண்ணன், வினோத் ஆகிய ஏழு பேரும் சேர்ந்து சுள்ளான் ரமேஷை தாக்கி கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் ரவுடி கொலை வழக்கில் ஆறு பேர் கைது

இதனையடுத்து பிடிபட்ட ஆறு பேரையும் கைது செய்த தாலுகா காவல் துறையினர், தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க...14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு: 4 பேர் மீது பாய்ந்த போக்சோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.