ETV Bharat / state

ஒட்டன்சத்திரத்தில் மாணவர்களுக்காக களமிறங்கிய பாஜக!

author img

By

Published : Sep 6, 2019, 8:52 AM IST

Updated : Sep 6, 2019, 9:37 AM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி பாஜகவினர், பள்ளி மாணவர்களுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாஜகவினர் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காவேரியம்மாபட்டியில் பல ஆண்டுகளாக அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை, தரமற்ற கழிப்பறை, இடிந்த சுற்றுச்சுவர் போன்ற பிரச்னைகளால் மாணவர்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் கிராம மக்களை ஒன்றிணைத்து பள்ளி மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கே சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பாஜகவினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்துசென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காவேரியம்மாபட்டியில் பல ஆண்டுகளாக அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை, தரமற்ற கழிப்பறை, இடிந்த சுற்றுச்சுவர் போன்ற பிரச்னைகளால் மாணவர்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.

இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் கிராம மக்களை ஒன்றிணைத்து பள்ளி மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கே சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பாஜகவினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்துசென்றனர்.

Intro:திண்டுக்கல். 05.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி , குடிநீர் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளிமாணவர்களுடன் அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியல் . போக்குவரத்து பாதிப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை.
Body:திண்டுக்கல். 05.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி , குடிநீர் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளிமாணவர்களுடன் அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியல் . போக்குவரத்து பாதிப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியில் பல ஆண்டுகளாக அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாணவிகளுக்கு தரமற்ற கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைத்து மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர் கிராம மக்களை ஒன்றிணைத்து பள்ளி மாணவர்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது .பின்னர் தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு வந்து உரியநடவடிக்கை ஓரிரு தினங்களில் எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.Conclusion:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி , குடிநீர் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளிமாணவர்களுடன் அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியல் . போக்குவரத்து பாதிப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை.

குறித்த செய்தி
Last Updated : Sep 6, 2019, 9:37 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.