திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பிப்ரவரி 20ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. கொடியேற்றம் தொடங்கியதிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் பால்குடம், முளைப்பாரி, அங்கப்பிரதக்ஷனம், மாவிளக்கு எடுத்தல் என பல்வேறு நேர்த்தி கடன்களை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கையில் அக்னி சட்டி ஏந்தியும், கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டும் பூக்குழி இறங்கினர்.
இதைத் தொடர்ந்து நாளை ( 7ஆம் தேதி ) தசாவதாரமும், நாளை மறுநாள் (8ஆம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும், 9ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. கொடியேற்றம் தொடங்கியதிலிருந்தே பக்தர்கள் பலர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!