ETV Bharat / state

திண்டுக்கல்லில் வெளியாகாத தர்பார் - ரசிகர்கள் கலவரத்தால் போலீஸ் தடியடி!

author img

By

Published : Jan 9, 2020, 1:13 PM IST

திண்டுக்கல்: தர்பார் திரைப்படம் வெளியாகாததை கண்டித்து ரஜினி ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர்.

தர்பார்
தர்பார்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததையடுத்து, காலை 4 மணியளவில் பல்வேறு மாவட்டங்களில் திரைப்படம் வெளியானது. ஆனால், திண்டுக்கல் நகர் பகுதிகளில் மட்டும் தற்போது வரை தர்பார் திரைப்படம் திரையிடப்படவில்லை.

திண்டுக்கல் ரவுண்டு சாலையில் உள்ள திரையரங்கில் தர்பார் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ட்விட்டர் வாயிலாக தர்பார் திரையிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் இன்று காலை படம் திரையிடப்படும் என காத்திருந்த ரஜினி ரசிகர்கள், ஆத்திரமடைந்து திரையரங்கு அருகே இருந்த பேனர்களை கிழித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் வெளியாகாத தர்பார்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'தர்பார்' வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததையடுத்து, காலை 4 மணியளவில் பல்வேறு மாவட்டங்களில் திரைப்படம் வெளியானது. ஆனால், திண்டுக்கல் நகர் பகுதிகளில் மட்டும் தற்போது வரை தர்பார் திரைப்படம் திரையிடப்படவில்லை.

திண்டுக்கல் ரவுண்டு சாலையில் உள்ள திரையரங்கில் தர்பார் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ட்விட்டர் வாயிலாக தர்பார் திரையிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் இன்று காலை படம் திரையிடப்படும் என காத்திருந்த ரஜினி ரசிகர்கள், ஆத்திரமடைந்து திரையரங்கு அருகே இருந்த பேனர்களை கிழித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் வெளியாகாத தர்பார்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'தர்பார்' வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்

Intro:திண்டுக்கல் 9.1.2020

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்பார் படம் திண்டுக்கல்லில் வெளியாகாத‌தால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்.

Body:ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானது. ஆனால் திண்டுக்கல் நகர் பகுதிகளில் மட்டும் தற்போது வரை தர்பார் திரைப்படம் திரையிடப்படவில்லை.

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள திரையரங்குகளில் தர்பார் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் டிவிட்டர் வாயிலாக தர்பார் திரையிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் இன்று காலை படம் திரையிடப்படும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இன்று காலையும் படம் ரிலீஸ் ஆகாத ஏமாற்றத்தில் திரையரங்கு அருகே இருந்த பேனர்களை ரசிகர்கள் கிழித்ததால் பர‌பரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.