ETV Bharat / state

கடனை திருப்பி தராததால் கொலை - கடனை திருப்பி தராமல் தாமதித்ததால் கொலை

திண்டுக்கல்: கடனை திருப்பி தராமல் தாமதித்ததால் கொலை செய்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

borrower delay to refund money leads to death
borrower delay to refund money leads to death
author img

By

Published : Jan 4, 2020, 3:20 PM IST

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது. இந்தக் கழிவறையை தூத்துக்குடியை சேர்ந்த ஆல்பர்ட் என்ற நபர் டெண்டர் மூலம் நடத்தி வந்த நிலையில் தொடர்ந்து நடத்த முடியாததால் தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் ஆரோக்கியதாஸ்(60) வசம் சப்-லீசுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் ஒப்படைத்துள்ளார். ஜான்சன் ஆரோக்கியதாஸ் சொந்த உறவுக்காரர் போல் உடன் பழகி வந்த சரவணனிடம்(30) பெருந்தொகையை கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பல மாதங்களாக இந்தத் தொகையை சரவணன் அவரிடம் திருப்பி கேட்டு வந்த நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸ் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரிடமிருந்து பணம் பெறும் நோக்கில் அவருடனேயே பசுமைபள்ளத்தாக்கு பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தங்கி கழிவறை வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலையிலிருந்தே பணம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறிது நேரத்தில் இருவரும் மது அருந்தியுள்ளனர். சரவணன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸை கத்தியால் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். இதனால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஜான்சன்ஆரோக்கியதாஸ் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை அறிந்த சரவணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் காவல் துறையினர் ஜான்சன் ஆரோக்கியதாஸ் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி கானா விலக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இருவர் மீதும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து மாணவர் பலி !

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது. இந்தக் கழிவறையை தூத்துக்குடியை சேர்ந்த ஆல்பர்ட் என்ற நபர் டெண்டர் மூலம் நடத்தி வந்த நிலையில் தொடர்ந்து நடத்த முடியாததால் தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் ஆரோக்கியதாஸ்(60) வசம் சப்-லீசுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் ஒப்படைத்துள்ளார். ஜான்சன் ஆரோக்கியதாஸ் சொந்த உறவுக்காரர் போல் உடன் பழகி வந்த சரவணனிடம்(30) பெருந்தொகையை கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பல மாதங்களாக இந்தத் தொகையை சரவணன் அவரிடம் திருப்பி கேட்டு வந்த நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸ் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரிடமிருந்து பணம் பெறும் நோக்கில் அவருடனேயே பசுமைபள்ளத்தாக்கு பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தங்கி கழிவறை வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலையிலிருந்தே பணம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறிது நேரத்தில் இருவரும் மது அருந்தியுள்ளனர். சரவணன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸை கத்தியால் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். இதனால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஜான்சன்ஆரோக்கியதாஸ் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை அறிந்த சரவணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் காவல் துறையினர் ஜான்சன் ஆரோக்கியதாஸ் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி கானா விலக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இருவர் மீதும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து மாணவர் பலி !

Intro:திண்டுக்கல் 4.1.2020

கடனை திருப்பி தராமல் தாமிதத்தால் கொலை செய்த சம்பவம் கொடைக்கானலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை உள்ளது. இந்தக் கழிப்பறையை தூத்துக்குடியை சேர்ந்த ஆல்பர்ட் என்ற நபர் டெண்டர் மூலம் நடத்தி வந்த நிலையில் தொடர்ந்து நடத்த முடியாததால் தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்த ஜான்சன் ஆரோக்கியதாஸ்(60) வசம் சப்-லீசுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் ஒப்படைத்துள்ளார். ஜான்சன் ஆரோக்கியதாஸ் தூத்துக்குடி ஸ்டேட்பேங்க் காலனியைச் சேர்ந்த அவரது நண்பராகவும் சொந்த உறவுக்காரர் போல் உடன் பழகி வந்த சரவணனிடம்(30) பெருந்தொகையை கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பல மாதங்களாக இந்த தொகையை சரவணன் அவரிடம் திருப்பி கேட்டு வந்த நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸ் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரிடமிருந்து பணம் பெறும் நோக்கில் அவருடனேயே அவர் பசுமைபள்ளத்தாக்கு பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தங்கி கழிப்பறை வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலையிலிருந்தே பணம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறிது நேரத்தில் இருவரும் மது அருந்தியுள்ளனர். சரவணன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜான்சன் ஆரோக்கியதாஸை கத்தியால் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். இதனால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஜான்சன்ஆரோக்கியதாஸ் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை அறிந்த சரவணன் நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் காவல் துறையினர் ஜான்சன் ஆரோக்கியதாஸ் உடலைக் கைப்பற்றி தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனைக்காக தேனி கானா விலக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இருவர் மீதும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.