ETV Bharat / state

CCTV:மதுபோதையில் தகராறு: சிமென்ட் கல்லால் தாக்கிய பதைபதைக்கும் காட்சி

author img

By

Published : Nov 24, 2022, 7:29 AM IST

திண்டுக்கல்லில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சிமென்ட் கல்லால் தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் தகராறு: சிமெண்ட் கல்லால் தாக்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..
மதுபோதையில் தகராறு: சிமெண்ட் கல்லால் தாக்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்தவர், முனியப்பன். இவரும் தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த சபரிநாத் என்பவரும் மதுபோதையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முனியப்பன் மார்க்கெட் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது கையில் சிமென்ட் கல்லோடு முனியப்பனை பின் தொடர்ந்த சபரிநாத், முனியப்பனை மடக்கி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது சிமென்ட் கல்லை எடுத்த முனியப்பன், சபரிநாத்தின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சபரிநாத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல் நிலையத்திற்குச் சென்ற முனியப்பன், தன்னை சபரிநாத் தாக்கி விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

CCTV:மதுபோதையில் தகராறு: சிமென்ட் கல்லால் தாக்கிய பதைபதைக்கும் காட்சி

இதனையடுத்து முனியப்பனை காவல் துறையினர் மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது முனியப்பன் தப்பி ஓடியுள்ளார். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தப்பியோடிய முனியப்பனை பிடித்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சேர்ந்தவர், முனியப்பன். இவரும் தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த சபரிநாத் என்பவரும் மதுபோதையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முனியப்பன் மார்க்கெட் பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது கையில் சிமென்ட் கல்லோடு முனியப்பனை பின் தொடர்ந்த சபரிநாத், முனியப்பனை மடக்கி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது சிமென்ட் கல்லை எடுத்த முனியப்பன், சபரிநாத்தின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சபரிநாத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல் நிலையத்திற்குச் சென்ற முனியப்பன், தன்னை சபரிநாத் தாக்கி விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

CCTV:மதுபோதையில் தகராறு: சிமென்ட் கல்லால் தாக்கிய பதைபதைக்கும் காட்சி

இதனையடுத்து முனியப்பனை காவல் துறையினர் மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது முனியப்பன் தப்பி ஓடியுள்ளார். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு தப்பியோடிய முனியப்பனை பிடித்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.