ETV Bharat / state

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் முறையாக பதில் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை! - மாநில தகவல் ஆணையர்

திண்டுக்கல்: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை உரிய காலத்திற்குள் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்துள்ளார்.

RTI
author img

By

Published : Apr 30, 2019, 10:04 AM IST

தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேசியதாவது,

பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலக பொது தகவல் அலுவலர்கள், மனுதாரர்களின் மனுவை சரிவர படித்து விதிகளின் கீழ் முறையாக குறிப்பிட்ட காலத்தில் பதில் தர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி முறைகள் உள்ளது.

மேலும், பொது தகவல் அலுவலர்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கிய விதிகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு மனுதாரர்களின் மனுவிற்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். ஆகவே பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்களை சரியாகவும், முறையாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிப்பது பொது தகவல் அலுவலர்களின் கடமை" என கூறினார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் பேசியதாவது,

பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலக பொது தகவல் அலுவலர்கள், மனுதாரர்களின் மனுவை சரிவர படித்து விதிகளின் கீழ் முறையாக குறிப்பிட்ட காலத்தில் பதில் தர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி முறைகள் உள்ளது.

மேலும், பொது தகவல் அலுவலர்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கிய விதிகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு மனுதாரர்களின் மனுவிற்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். ஆகவே பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்களை சரியாகவும், முறையாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிப்பது பொது தகவல் அலுவலர்களின் கடமை" என கூறினார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
Intro:திண்டுக்கல் 29.4.19

திண்டுக்கல்லில் தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


Body:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார், பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலக பொது தகவல் அலுவலர்கள் மனுதாரர்களின் மனுவை சரிவர படித்து விதிகளின் கீழ் முறையாக குறிப்பிட்ட காலத்தில் பதில் தர வேண்டும். அவ்வாறு இல்லாமல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி முறைகள் உள்ளது.

மேலும், பொது தகவல் அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கிய விதிகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு மனுதாரர்களின் மனுவிற்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். ஆகவே பொதுமக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்களை சரியாகவும், முறையாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிப்பது பொது தகவல் அலுவலர்களின் கடமை" என கூறினார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர்களுக்கு அளிக்கப்படும் தகவல்கள் பற்றி பல்வேறு சந்தேகங்கள் குறித்து மாநில தகவல் ஆணையரிடம் கேட்டறிந்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.