ETV Bharat / state

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

author img

By

Published : Jan 28, 2020, 10:40 AM IST

திண்டுக்கல்: பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி
கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கோவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள், பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

போட்டிகளில் உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட 33 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஆடவர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்ஷிப் பட்டம், கோவை ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரிக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்ஷிப் பட்டம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.

கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி

மகளிர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்ஷிப் பட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரிக்கும், ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்ஷிப் பட்டம் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம் வென்று சாதனை படைத்த மகள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கோவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள், பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

போட்டிகளில் உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட 33 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஆடவர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்ஷிப் பட்டம், கோவை ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரிக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்ஷிப் பட்டம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.

கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி

மகளிர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்ஷிப் பட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரிக்கும், ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்ஷிப் பட்டம் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தந்தையின் கனவை நிறைவேற்ற தங்கம் வென்று சாதனை படைத்த மகள்!

Intro:திண்டுக்கல் 27.01.2020
பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளில் மகளிர் மற்றும் ஆடவர் இரு பிரிவிலும் கோவையை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் சாம்பியன்சிப் பட்டத்தை வென்றனது.

Body:திண்டுக்கல் 27.01.2020
எம்.பூபதி செய்தியாளர்

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளில் மகளிர் மற்றும் ஆடவர் இரு பிரிவிலும் கோவையை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் சாம்பியன்சிப் பட்டத்தை வென்றனது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கோவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மூன்று நாள் விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை துவங்கியது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை வகித்தார். பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார். போட்டிகளில் உடுமலை, பொள்ளாச்சி கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 33 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் , ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் முதல்நாள் நடைபெற்றன. ஆடவர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்சிப் பட்டம் கோவை ஜிஆர்ஜி பாலிடெக்னிக் கல்லூரிக்கும், ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்சிப் பட்டம் கோவை பிஎஸ்ஜி., கல்லூரிக்கும் வழங்கப்பட்டது. மகளிர் ஒட்டுமொத்த தடகள சாம்பியன்சிப் பட்டம் பொள்ளாச்சி மகாலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரிக்கும், ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியன்சிப் பட்டம் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் வழங்கப்பட்டது.Conclusion:திண்டுக்கல் 27.01.2020


பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளில் மகளிர் மற்றும் ஆடவர் இரு பிரிவிலும் கோவையை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரிகள் சாம்பியன்சிப் பட்டத்தை வென்றனது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.