ETV Bharat / state

தர்மபுரி: ரயில்பாதை அருகே துண்டான நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

author img

By

Published : Apr 12, 2021, 2:05 PM IST

தர்மபுரி: கடகத்தூர் அருகே ரயில் பாதையின் பக்கத்தில் உடல் துண்டான நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடகத்தூர்
கடகத்தூர்

தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் பகுதியில் செல்லும் ரயில் பாதை அருகில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் துண்டான நிலையில் இருப்பதாக தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தர்மபுரி நகர காவல் துறையினர் ரயில் பாதையின் அருகில் இருந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம் சின்னவன் என்பவரது மகன் ராஜ்குமார் (28) எனத் தெரியவந்தது.

உடலைக் கைப்பற்றிய தர்மபுரி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து இளைஞரின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் பகுதியில் செல்லும் ரயில் பாதை அருகில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் துண்டான நிலையில் இருப்பதாக தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தர்மபுரி நகர காவல் துறையினர் ரயில் பாதையின் அருகில் இருந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம் சின்னவன் என்பவரது மகன் ராஜ்குமார் (28) எனத் தெரியவந்தது.

உடலைக் கைப்பற்றிய தர்மபுரி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து இளைஞரின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.