தருமபுரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக இலக்கியம்பட்டியில் உள்ள ஏரி முழுக்கொள்ளவை எட்டி உபரிநீர் வெளியேறியது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து ஏரி நிரம்பியதை வரவேற்கும் விதமாக மலர் தூவியும், ஆடு பலியிட்டும் கொண்டாடினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு ஒருமுறைகூட ஏரி நிரம்பவில்லை.
இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினோம். ஆனால் தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியுள்ளது. இதை வரவேற்கும் விதமாக தான் மலர் தூவியும், ஆடு பலியிட்டும் கொண்டாடினோம் என்றனர்.
இதையும் படிங்க: குடிமராமத்து பணி: தூர்வாரப்படும் செம்பரபாக்கம் ஏரி!