தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரூர் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பி.இ. ஏரோநாட்டிக்கல் படித்த இளைஞர் கருத்தோவியம் (30) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அரூர் பகுதியை சேர்ந்த விவசாய தொழில் செய்து வரும் பார்த்திபன் (49) சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான புன்னியக்கோட்டியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.