தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
தற்போது கரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவுத்துள்ளது. இதையடுத்து ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பது குறித்து கடந்த வாரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (அக.22) ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பரிசல் இயக்க தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி