ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் தோல்வி தற்காலிகமானது - டிடிவி தினகரன் - bdefeat of the parliamentary

தருமபுரி: மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தற்காலிகமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Sep 12, 2019, 1:54 PM IST

அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் மகள் திருமணம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்றது. இதை அமமுக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அப்போது பேசிய அவர், ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு அது பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைய நீண்ட காலம் தேவைப்படும். இயக்கம் தொடங்கிய உடனே சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் வேண்டும் என சிலர் நினைத்து இங்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் ஆசை நிறைவேறாததால் தற்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டதாக, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை மறைமுகமாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தற்காலிகமானது, அது நிரந்தரம் கிடையாது என்றார். மேலும், தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் மகள் திருமணம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்றது. இதை அமமுக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அப்போது பேசிய அவர், ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு அது பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைய நீண்ட காலம் தேவைப்படும். இயக்கம் தொடங்கிய உடனே சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் வேண்டும் என சிலர் நினைத்து இங்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் ஆசை நிறைவேறாததால் தற்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டதாக, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை மறைமுகமாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தற்காலிகமானது, அது நிரந்தரம் கிடையாது என்றார். மேலும், தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:tn_dpi_01_ttv_dinakaran_vis_7204444


Body:tn_dpi_01_ttv_dinakaran_vis_7204444


Conclusion:

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ஒரு தற்காலிக பின்னடைவுமட்டுமே நிரந்தரமில்லை-டிடிவி தினகரன் தருமபுரியில் பேச்சு. 


அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மகள் திருமணம், 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எருமியாம் பட்டியில் நடைபெற்றது. இந்த திருமணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்று நடத்தி வைத்தார். 


இந்தத் திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி பேசிய டிடிவி தினகரன், ஓர் இயக்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு அது பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படும். இயக்கம் தொடங்கிய உடனே சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாக வேண்டுமென சிலர் நினைத்து இங்கு வந்தார்கள். அவர்கள் அவர்கள் ஆசை நிறைவேறாத காரணத்தால், தற்போது வேறு கட்சிக்கு புகழிடம் சென்றுள்ளார்கள். அறிஞர்அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் கூட இயக்கம் உருவாகி நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தான் ஆட்சிக்கு வர முடிந்தது என்பதை நன்றாக உணர்ந்தவர்கள் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக இயக்கத்தில் தான் இருக்கிறார்கள். யாரோ ஒரு சிலர் மட்டுமே வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டதால் அவர்களிடம் 10 பேர் மட்டுமே சென்று உள்ளனர். ஆனால் அந்த மாவட்டங்களில் அவர்களுக்கு எதிரானவர்கள் அவர்களால்  பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேடி வருகின்றனர். நான் செல்லுகின்ற இடமெல்லாம் பொதுமக்கள் என்னிடத்தில் வந்து நாங்கள் பரிசுப் பெட்டிசின்னத்திற்கு தான் வாக்களித்தோம் எங்களது வாக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என தெரிவிக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு ஒரு தற்காலிகமானது அது நிரந்தரம் கிடையாது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி தமிழக மக்களுக்கு வழங்கும் என டிடிவி தினகரன் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மகள் திருமண விழாவில் பேசினார்.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.