ETV Bharat / state

’ஆசிரியர்களின் கனவு நிறைவேறும் காலம் வெகுதொலைவில் இல்லை’ - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்

author img

By

Published : Nov 15, 2019, 4:56 PM IST

தருமபுரி: ஆசிரியர்களின் கனவுகள் நிறைவேறும் காலம் மிக விரைவில் வரவிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Teachers dream come true soon, minister sengottaiyan hints

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, காரிமங்கலம் தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு 100 விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மேலும், மாவட்டத்தில் 2018-19ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, தனியார் பள்ளியின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், “இந்திய அளவிலேயே தமிழ்நாட்டு மாணவர்கள்தான் படிப்பறிவு மிக்கவர்களாக உள்ளனர். மற்ற மாநில மாணவர்களைக் காட்டிலும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குதான் திறமையும் ஆற்றலும் அதிகளவு உள்ளன. இத்தகைய திறமையையும் ஆற்றலையும் உருவாக்குபவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆகவே தற்போது உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வரும் கல்வியாண்டில் மடிக்கணிணி வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

மாணவர்களின் மடியில் கணினிகள் தவழும்போது, அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் மடியிலும் தவழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதுவரை 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசிடம் திட்டம் உள்ளது. எனவே ஆசியர்கள் கவலைப்படத் தேவையில்லை உங்கள் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்று இந்த அரசுக்கு நன்றாகத் தெரியும். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

ஆசிரியர்களின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளதால், அந்தக் கனவுகள் நிறைவேறும் காலம் விரைவில் வரவிருக்கிறது. ஆசிரியர்களுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளதை அரசால் யூகிக்க முடிகிறது. அதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு சலுகைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்...கால் பட்டா குத்தம் - அமைச்சர் காமராஜ் காட்டம்

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, காரிமங்கலம் தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு 100 விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

மேலும், மாவட்டத்தில் 2018-19ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, தனியார் பள்ளியின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், “இந்திய அளவிலேயே தமிழ்நாட்டு மாணவர்கள்தான் படிப்பறிவு மிக்கவர்களாக உள்ளனர். மற்ற மாநில மாணவர்களைக் காட்டிலும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குதான் திறமையும் ஆற்றலும் அதிகளவு உள்ளன. இத்தகைய திறமையையும் ஆற்றலையும் உருவாக்குபவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆகவே தற்போது உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வரும் கல்வியாண்டில் மடிக்கணிணி வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

மாணவர்களின் மடியில் கணினிகள் தவழும்போது, அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் மடியிலும் தவழ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதுவரை 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்

மேலும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசிடம் திட்டம் உள்ளது. எனவே ஆசியர்கள் கவலைப்படத் தேவையில்லை உங்கள் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்று இந்த அரசுக்கு நன்றாகத் தெரியும். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

ஆசிரியர்களின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளதால், அந்தக் கனவுகள் நிறைவேறும் காலம் விரைவில் வரவிருக்கிறது. ஆசிரியர்களுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளதை அரசால் யூகிக்க முடிகிறது. அதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு சலுகைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்...கால் பட்டா குத்தம் - அமைச்சர் காமராஜ் காட்டம்

Intro:ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. Body:ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. Conclusion:ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.


தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு 100 சதவீத தேர்ச்சி சதவீதம் பெற உழைத்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10. மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு தனியார் பள்ளியின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்.

இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர் என்றும் தமிழகத்தில் 49 சதவீத மாணவமாணவியர் உயர்கல்வி படிக்கின்றனர். இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் 98.41 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் அதிக அளவு பயில காரணம் தமிழக அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இட ஒதுக்கீடு அதிகரித்ததன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் அதிக அளவு உயர்கல்வி படிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்.

இந்திய அளவிலேயே தமிழகத்தில் படிக்கக் கூடிய மாணவர்கள் தான் நல்ல முறையில் படிப்பதாகவும் தமிழக மாணவர்களுக்கு தான்திறமையும் ஆற்றலும் அதிக அளவு உள்ளதாகவும் மற்ற மாநில மாணவரிடம் அத்தகைய ஆற்றலும் திறமையும் இல்லை. திறமையையும் ஆற்றலையும் உருவாக்குபவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் உருவாக்குகிறார்கள்.தற்போது உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வரும் கல்வி ஆண்டில் மடிக்கணிணி வழங்க அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் இதுவரை 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசிடம் திட்டம் உள்ளது. 54 லட்சத்து62ஆயிரம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசியர்கள் கவலைப்படத் தேவையில்லை உங்கள் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்று அரசுக்கு நன்றாக தெரிகிறது.ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். ஆசிரியர்கள் கனவுகள் நிறைவேறும் காலம் விரைவில் வர இருக்கிறது ஆசைகளை கனவுகளை நிறைவேற்ற கடமை அரசிடம் உள்ளது ஆசிரியர்களுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. அதனை அரசால் யூகிக்க முடிகிறது.என ஆசிரியர்களுக்கு சலுகைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது மறைமுகமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.