ETV Bharat / state

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு!

author img

By

Published : Jul 20, 2019, 10:43 AM IST

தருமபுரி: குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கல்விக்கடன், தொழில்கடன் உள்ளிட்டவற்றில் கடன் வழங்கிட வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கல்வி பயிலவும், மறுவாழ்வு அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும், குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கல்விக்கடன், தொழில்கடன் உள்ளிட்டவற்றில் கடன் வழங்கிட வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கல்வி பயிலவும், மறுவாழ்வு அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும், குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Intro:tn_dpi_01_thalthapatoor _ anniyam review_meeting_vis_byte_7204444


Body:tn_dpi_01_thalthapatoor _ anniyam review_meeting_vis_byte_7204444


Conclusion:தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த  வேண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பில் தகவல்.    தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடமக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில்தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு வழங்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட வர்கள் பற்றிய தற்போதைய நிலை.அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை பற்றிய விபரம்‌. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம். தனிநபர் இல்ல கழிப்பிடம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட விவரம். நகராட்சி பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர் நிலை குறித்தும் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன்.கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது அதனடிப்படையில் இன்று தர்மபுரி மாவட்டத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது இந்த ஆய்வுக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை. விசாரணை முடிந்த முடிவுற்ற வழக்குகளில் கூடுதல் பலன்களாக வாரிசுகளுக்கு வேலை நிவாரண உதவி அரசு நிலம் என பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் 

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய உதவி குழு கடன் கல்விக்கடன் தொழில் கடன் தொழில் துவங்க கடன் உதவியை விரைவாக வழங்கிட வங்கிகளுக்கு அறிவுரை வழங்கினார்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து முதன்மை கல்வி அலுவலர் மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.மற்ற மாவட்டங்களைவிட தர்மபுரி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது இது குறித்து ஆராய வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து கல்வி பயிலவும் மறுவாழ்வு அளிக்கவும்  பொதுமக்களுக்கு குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.