தமிழ்நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தருமபுரி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . ஏரியூர், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
![தனது வாக்கை பதிவு செய்த ஜி.கே.மணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-pmk-gk-mani-vote-img-7204444_30122019133012_3012f_1577692812_722.jpg)
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஏரியூர் ஒன்றியம் அஜ்ஜிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு